ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், பாடகர் என பன்முகம் கொண்டவர்களில் வெங்கட் பிரபுவும் ஒருவர். 'சென்னை 28 - 1, 2, மங்காத்தா' என வசூல் ரீதியான வெற்றிப் படங்களையும் கொடுத்தவர். 'சென்னை 28 பார்ட் 2, ஆர்கே நகர்' ஆகிய படங்களையும் தயாரித்துள்ளார். அவருடைய மூன்றாவது தயாரிப்பாக சிம்புதேவன் இயக்க உள்ள படத்தைத் தயாரிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சிம்புதேவன், வடிவேலு நாயகனாக நடிக்கும் 'இம்சை அரசன் 24ம் புலிகேசி' படத்தை இயக்க ஆரம்பித்தார். ஆனால், அந்தப் படத்தில் நடிக்க முடியாதென வடிவேலு சொன்னதால் அதற்கான பஞ்சாயத்து கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. அது இன்னும் முடியாமல் இழுத்துக் கொண்டேயிருக்கிறது.
இதனிடையே, சிம்புதேவன் வேறு ஒரு கதையைச் சொல்லி வெங்கட்பிரபுவிடம் சம்மதம் வாங்கிவிட்டாராம். தற்போது அந்தப் படத்திற்கான கதை விவாதம் நடந்து வருகிறது. விரைவில் யார் யார் நடிக்கப் போகிறார்கள் என அறிவிப்பு வரலாம். குறுகிய காலத் தயாரிப்பாக இந்தப் படம் தயாராக உள்ளதாம்.