சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
கன்னடத்தில் வெளிவந்து பெரும் வெற்றியைப் பெற்ற படம் 'யு டர்ன்'. 2016ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தை பவன்குமார் இயக்கியிருந்தார். இந்தப் படத்தைப் பார்த்ததும் அதன் ரீமேக்கில் நடிக்க ஆசைப்பட்டு சமந்தா படத்தின் உரிமையை வாங்கியதாகச் சொல்லப்பட்டது. ஆனால், அவர் வாங்கவில்லை படத்தில் நடிக்க மட்டும் செய்கிறார் என பின்னர் தகவல் வெளியானது.
கன்னடத்தில் படத்தை இயக்கிய பவன்குமார் தமிழ், தெலுங்கில் ரீமேக் செய்கிறார் என அறிவிக்கப்பட்டது. அதனால், இரண்டு மொழிகளுக்கும் பொதுவான நடிகர்களை படத்தில் நடிக்க வைத்து படப்பிடிப்பை ஆரம்பித்தனர். ஆதி, ராகுல் ரவீந்திரன் ஆகியோர் படத்தில் சமந்தாவிற்கு அடுத்த கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
பொதுவாக தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாரிக்கப்படும் படம் என்றால் அதில் ஏதாவது ஒரு மொழியில் மட்டும்தான் பல காட்சிகளை எடுப்பார்கள். சில காட்சிகளை ஒரே மொழியில் மட்டும் எடுத்து ரசிகர்களையும் ஏமாற்றுவார்கள். 'பாகுபலி' படங்கள் கூட அப்படி எடுக்கப்பட்ட படங்கள்தான். ஆனால், 'யு டர்ன்' படத்தை தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலுமே தனித் தனியாகப் படமாக்கியிருக்கிறோம் என படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள்.