ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மேற்கு தொடர்ச்சி மலை படத்தின் மூலம் தயாரிப்பாளராக பெரிய வெற்றியை பெற்றிருக்கும் விஜய் சேதுபதியின் அடுத்த அவதாரம் சீதக்காதி. சிவாஜி, கமல், விக்ரம் வரிசையில் அடுத்தகட்டத்தை நோக்கி விஜய் சேதுபதியை நகர்த்தும் படம். இதில் அவர் 75 வயது நாடக நடிகராக நடிக்கிறார்.
விஜய் சேதுபதிக்கு அடையாளம் கொடுத்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்குகிறார். சரஸ்காந்த் ஒளிப்பதிவு செய்கிறார். கோவிந்த் மேனன் இசை அமைக்கிறார் படம் பற்றிய புதிய தகவல்கள் வருமாறு:
நடிப்பையே உயிர்மூச்சா கொண்டு வாழும் ஐயா என்ற நாடக நடிகரின் வாழ்க்கை. 75 வயதில் குடும்பத்தையும், நாடக கலையையும் காப்பாற்ற அவர் போராடுவதே கதை.
விஜய் சேதுபதியின் மனைவியாக நீண்ட இடைவெளிக்கு பிறகு தேசிய விருது நடிகை அர்ச்சனா நடிக்கிறார். பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தும் மறுத்த அர்ச்சனா இதில் கதை பிடித்து நடிக்கிறார்.
முதன் முதலாக விஜய் சேதுபதி இரண்டு வேடங்களில் நடிக்கிறார். அய்யா என்கிற அப்பா வேடம். குமார் என்கிற மகன் வேடம்.
பாரதிராஜா, கே.பாக்யராஜ், மகேந்திரன், மவுலி என நான்கு இயக்குனர்கள் நடித்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் அவர்களாகவே வருகிறார்கள். படத்தை நகர்த்திச் செல்லும் முக்கிய கேரக்டரில் மகேந்திரன் நடித்திருக்கிறார்.
இந்தப் படத்தில் நடிக்க அமிதாப்பச்சன், கமல் தான் முதலில் பேசப்பட்டார்கள். அவர்களின் கால்ஷீட் கிடைப்பதில் பிரச்னை இருந்ததால் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார்.
ஹாலிவுட்டில் பயன்படுத்தப்படும் ப்ராஸ்தட்டி எனப்படும் மேக்அப் தொழில்நுட்பத்தை கொண்டு விஜய் சேதுபதி 75 வயது முதியவராக மாற்றப்பட்டார். இதற்காக ஹாலிவுட் கலைஞர்கள் சென்னை வந்திருந்தார்கள்.
விஜய் சேதுபதி நாடக கலைஞர் என்பதால் அவர் இந்திரா பார்த்தசாரதி, சுஜாதா ஆகியோரிடன் நாடகங்களில் நடிப்பது போன்ற காட்சிகள் இருக்கிறது. நாடகத்தை பயன்படுத்திக் கொள்ள முறையான அனுமதி பெறப்பட்டிருந்தது.
விஜய் சேதுபதியின் 75 வயது கேரக்டருக்கு அதிக வசனம் இல்லை. ஆனால் கிளைமாக்சில் 8 நிமிட வசனத்தை ஒரே டேக்கில் பேசி அசத்தி இருக்கிறார்.
ரம்யா நம்பீசன், பார்வதி, காயத்ரி உள்பட சிலர் கவுரவ வேடங்களில் நடித்துக் கொடுத்திருக்கிறார்கள்.
100-க்கும் மேற்பட்ட நிஜ நாடக கலைஞர்களும் படத்தில் நடித்திருக்கிறார்கள்.