ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கெளதம்மேனன் இயக்கிய மின்னலே படத்தில் ஒளிப்பதிவாளரானவர் ஆர்.டி.ராஜசேகர். அதன்பிறகு குறுகிய காலத்தில் முன்னணி ஒளிப்பதிவாளராகி விட்ட அவர், தற்போது நயன்தாரா நடித்துள்ள இமைக்கா நொடிகள் படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆர்.டி.ராஜசேகர் பேசும்போது, சில படங்களில் நான் ரொம்ப கஷ்டப்பட்டு படமாக்கிய காட்சிகள் படம் வெளியாகும்போது கத்தரிக்கப்பட்டிருக்கும். இந்த காட்சி ரசிகர்கள் மத்தியில் நமக்கு பெயர் வாங்கித்தரும் என்று நான் எதிர்பார்க்கும் காட்சிகள் படத்தில் இல்லாமல் போயிருக்கும்போது மனசுக்கு கஷ்டமாக இருக்கும். ஆனால் இந்த இமைக்கா நொடிகள் படத்தின் எடிட்டர் அப்படி செய்யவில்லை. அழகியலான காட்சிகளில் அவர் கைவைக்கவில்லை என்று சொன்னார்.
மேலும், எனக்குத் தெரிந்தது வரை நயன்தாரா ஒரு தனித்துவமான நடிகை. கேமராவின் நுட்பங்களை தெரிந்து கொண்டு அதற்கேற்ப தனது நடிப்பை பிரதிபலிக்கக்கூடியவர். அவர் நடிக்கும் காட்சிகளை படமாக்குவதே ஒரு இனிமையான அனுபவம்தான் என்கிறார் ஆர்.டி.ராஜசேகர்.