காதலருடன் ஹூமா குரேஷிக்கு நிச்சயதார்த்தம் நடந்ததா? | ரோபோ சங்கர் நினைவாக குபேரர் கோவிலுக்கு ரோபோ யானையை பரிசளித்த நடிகர் டிங்கு! | தீபாவளிக்கு 'கருப்பு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | ஹாட்ரிக் அடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன் | ராஜமவுலி தயாரிப்பில் பஹத் பாசில் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது! | இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம் | 'காந்தாரா சாப்டர் 1' ஹிட்: ஆன்மிக பயணம் செல்லும் ரிஷப் ஷெட்டி | ரஜினி பிறந்தநாளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்! | 'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் |
1980களில் கனவு கன்னியாக இருந்தவர் ஜெயப்பிரதா. தென்னிந்திய மொழிகளில் ஆதிக்கம் செலுத்தியவர் பின்னாளில் பாலிவுட்டிலும் வெற்றி நாயகியாக வலம் வந்தார். சில காலம் அரசியலிலும் சாதித்த ஜெயப்பிரதா, தற்போது அடுத்த அவதாராமாக சின்னத்திரையிலும் கால் பதித்துள்ளார். ஹிந்தி முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் பெர்பெக்ட்பதி என்ற தொடரில் நடிக்கிறார், இதுபற்றி அவர் கூறியதாவது
பல ஆண்டுகளாகவே என்னை சீரியலில் நடிக்க அழைத்தார்கள். நான்தான் மறுத்து வந்தேன். பெர்பெக்ட்பதியின் கதையும் கேரக்டரும் பிடித்திருந்ததால் நடிக்க ஒப்புக் கொண்டேன். இதில் நான் மாமியாராக நடிக்கிறேன். இது சீரியல்களில் வரும் வழக்கமான மாமியார் கேரக்டர் இல்லை. முற்போக்கு சிந்தனையுள்ள மாமியாராக நடிக்கிறேன்.
ஒவ்வொருவரும் தங்களுக்கு பொருத்தமான துணை அமைய வேண்டும் என்று விரும்புகின்றனர். அவர்களுக்கு அறிவுரைகளும் ஆலோசனைகளும் சொல்லுவதாக எனது கதாபாத்திரம் இருக்கும். டி.வி தொடர்கள் தான் கிராமத்து மக்கள்வரை அதிகமாக சென்று அடைகிறது. நாம் சொல்ல நினைக்கும் கருத்துக்களை இந்த தொடர்கள் மூலம் மக்களிடம் எளிதாக கொண்டு சேர்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.