மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

1980களில் கனவு கன்னியாக இருந்தவர் ஜெயப்பிரதா. தென்னிந்திய மொழிகளில் ஆதிக்கம் செலுத்தியவர் பின்னாளில் பாலிவுட்டிலும் வெற்றி நாயகியாக வலம் வந்தார். சில காலம் அரசியலிலும் சாதித்த ஜெயப்பிரதா, தற்போது அடுத்த அவதாராமாக சின்னத்திரையிலும் கால் பதித்துள்ளார். ஹிந்தி முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் பெர்பெக்ட்பதி என்ற தொடரில் நடிக்கிறார், இதுபற்றி அவர் கூறியதாவது
பல ஆண்டுகளாகவே என்னை சீரியலில் நடிக்க அழைத்தார்கள். நான்தான் மறுத்து வந்தேன். பெர்பெக்ட்பதியின் கதையும் கேரக்டரும் பிடித்திருந்ததால் நடிக்க ஒப்புக் கொண்டேன். இதில் நான் மாமியாராக நடிக்கிறேன். இது சீரியல்களில் வரும் வழக்கமான மாமியார் கேரக்டர் இல்லை. முற்போக்கு சிந்தனையுள்ள மாமியாராக நடிக்கிறேன்.
ஒவ்வொருவரும் தங்களுக்கு பொருத்தமான துணை அமைய வேண்டும் என்று விரும்புகின்றனர். அவர்களுக்கு அறிவுரைகளும் ஆலோசனைகளும் சொல்லுவதாக எனது கதாபாத்திரம் இருக்கும். டி.வி தொடர்கள் தான் கிராமத்து மக்கள்வரை அதிகமாக சென்று அடைகிறது. நாம் சொல்ல நினைக்கும் கருத்துக்களை இந்த தொடர்கள் மூலம் மக்களிடம் எளிதாக கொண்டு சேர்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.




