இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
1980களில் கனவு கன்னியாக இருந்தவர் ஜெயப்பிரதா. தென்னிந்திய மொழிகளில் ஆதிக்கம் செலுத்தியவர் பின்னாளில் பாலிவுட்டிலும் வெற்றி நாயகியாக வலம் வந்தார். சில காலம் அரசியலிலும் சாதித்த ஜெயப்பிரதா, தற்போது அடுத்த அவதாராமாக சின்னத்திரையிலும் கால் பதித்துள்ளார். ஹிந்தி முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் பெர்பெக்ட்பதி என்ற தொடரில் நடிக்கிறார், இதுபற்றி அவர் கூறியதாவது
பல ஆண்டுகளாகவே என்னை சீரியலில் நடிக்க அழைத்தார்கள். நான்தான் மறுத்து வந்தேன். பெர்பெக்ட்பதியின் கதையும் கேரக்டரும் பிடித்திருந்ததால் நடிக்க ஒப்புக் கொண்டேன். இதில் நான் மாமியாராக நடிக்கிறேன். இது சீரியல்களில் வரும் வழக்கமான மாமியார் கேரக்டர் இல்லை. முற்போக்கு சிந்தனையுள்ள மாமியாராக நடிக்கிறேன்.
ஒவ்வொருவரும் தங்களுக்கு பொருத்தமான துணை அமைய வேண்டும் என்று விரும்புகின்றனர். அவர்களுக்கு அறிவுரைகளும் ஆலோசனைகளும் சொல்லுவதாக எனது கதாபாத்திரம் இருக்கும். டி.வி தொடர்கள் தான் கிராமத்து மக்கள்வரை அதிகமாக சென்று அடைகிறது. நாம் சொல்ல நினைக்கும் கருத்துக்களை இந்த தொடர்கள் மூலம் மக்களிடம் எளிதாக கொண்டு சேர்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.