ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நாடோடிகள் பட நாயகி நடிகை அனன்யாவின் கொச்சின் வீடு வெள்ளத்தில் மூழ்கியதால் அவர் அடைக்கலம் தேடி நடிகை ஆஷா சரத் வீட்டில் தங்கியுள்ளதாக வீடியோ வெளியிட்டுள்ளார்.
கேரளாவில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளத்தால்,மக்கள் உணவு, உடையின்றி தத்தளித்து வருகின்றனர். அவர்களுக்கு உதவிகள் வழங்க கோரி பல பிரபலங்களும் வீடியோ வெளியிட்டு வருகின்றனர். மலையாள நடிகை ரஷியா விஜயன் உதவி எண்கள் தொடர்பு கொள்ள இயலவில்லை என்று வேதனை தெரிவித்துள்ளார்
350-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கும் நிலையில் ஏராளமானோர் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருவதாகவும், பிரபலங்கள் பலர் தங்களது வீடுகளை விட்டு நண்பர்கள் வீடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்தவகையில் தமிழில் நடோடிகள், எங்கேயும் எப்போதும், உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை அனன்யா, வீட்டிற்குள் வெள்ளம் புகுந்து உள்ளது.
கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள அனன்யாவின் வீடு முழுவதும் தண்ணீருக்குள் மூழ்கியுள்ளதால், பெரும்பாவூரில் உள்ள நடிகை ஆஷா ஷரத்தின் வீட்டில் தங்கி இருப்பதாக நடிகை அனன்யா வீடியோ மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.
தனது உறவினர்களின் வீடுகளிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது இதனால் என்ன நடக்குமெனத் தெரியவில்லை. எல்லாம் கடவுளின் கையில் உள்ளது என்று கூறியுள்ள அனன்யா ஆபத்தில் சிக்கியுள்ள மக்களை காப்பாற்ற வேண்டும். என்றும் தனது குடும்பத்தினரை காப்பாற்றியவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.