ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரேமம் படம் வந்தாலும் வந்தது.. சினிமா பிரபலங்கள் பலருக்கும் தாங்கள் பள்ளியில், கல்லூரியில் படித்த காலங்களில் தங்களது டீச்சர் மீது அந்த வயதில் தோன்றிய இனம் புரியாத ஈர்ப்பை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்கள். அந்தவிதமாக பாலிவுட் முன்னணி நடிகர் சல்மான்கானும் தனது பள்ளி அனுபவத்தில் அப்படி ஒரு பரவச அனுபவம் இருந்ததாக கூறியுள்ளார்.
தான் நடத்திவரும் தஸ் கா டம் டமார் நிகழ்ச்சியின்போது மனம் திறந்துள்ளார். பள்ளியில் படிக்கும்போது தனது மனம் கவர்ந்த டீச்சர் ஒருவரை தினசரி தனது சைக்கிளில் அழைத்து வருவாராம் சல்மான்கான். இதற்காக தனது சைக்கிளின் பின்னால் உள்ள கேரியரை கழற்றி வைத்துவிட்டு, டீச்சரை முன்பக்கம் அமரவைத்து சைக்கிளை ஓட்டிக்கொண்டே பேசிக்கொண்டு வருவேன் என கூறியுள்ளார்.
"பலருக்கும் படிக்கும் பருவத்தில் தங்கள் ஆசிரியை மீதான ஈர்ப்பு இருந்திருக்கவே செய்யும்.. பெரும்பாலானோர் அதை வெளியில் சொல்வதில்லை. ஆனால் நான் ஓப்பனாக சொல்லிவிட்டேன்" என கூறியுள்ளார் சல்மான்கான்.