சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் மழை காரணமாக கேரள மாநிலம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. கேரளாவுக்கு பல்வேறு தரப்பினரும் உதவி வருகிறார்கள். தமிழ் திரைப்பட நட்சத்திரங்களும் நிதி அறிவித்து வழங்கி வருகிறார்கள். கேரள வெள்ள நிவாரணத்துக்காக சூர்யா - கார்த்தி சார்பில் 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி நேற்று கேரள முதல்வர் பினராய் விஜயனை சந்தித்த கார்த்தி அவரிடம் 25 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். கார்த்தியுடன், ராஜசேகர பாண்டியனும் உடன் சென்றார்.
மலையாள நடிகர் சங்கத்தின் வெள்ளி விழாவுக்காக சூர்யா 10 லட்சம் நிதி அளிப்பதாக அறிவித்திருந்தார். அதன்படி மலையாள நடிகர் சங்கத் தலைவர் மோகன்லாலை சந்தித்து அவரிடம் 10 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார் கார்த்தி. சூர்யாவுக்கும், கார்த்திக்கும் கேரளாவில் பெரிய அளவில் ரசிகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.