ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மாப்பிள்ளை படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஹன்சிகா. திரையுலகத்தில் 15 வருடங்களையும், நாயகியாக 11 வருடங்களையும் கடந்துள்ள ஹன்சிகா, தற்போது துப்பாக்கிமுனை, 100 படங்களில் நடித்துள்ளார்.
இவர் அடுத்து நடிக்க இருக்கும் படம் 50வது படமாகும். இதை ஹன்சிகாவின் பிறந்தநாளான இன்று(ஆக.,9) தனுஷ், டுவிட்டர் பக்கத்தில் அறிவிப்பதாக இருந்தது. ஆனால் அறிவிக்கவில்லை.
திமுக., தலைவர் கருணாநிதி மறைவையொட்டி அவருக்கு ஏற்கனவே இரங்கல் தெரிவித்திருந்தார் ஹன்சிகா. தொடர்ந்து அவருக்கு மரியாதை செய்யும் விதமாக தனது பட அறிவிப்பை தள்ளி வைத்துவிட்டார். விரைவில் பட அறிவிப்புக்கான மறுதேதி வெளியாகும் என ஹன்சிகா டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.
அதேசமயம், ஹன்சிகா, தனது பிறந்தநாளை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தார். எப்போதும் தனது ஒவ்வொரு பிறந்தநாளின் போது ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பார், ஆனால் இந்தாண்டு தத்தெடுக்கவில்லை. மும்பையில் முதியோர் இல்லம் ஒன்றை ஹன்சிகா கட்டி வருகிறார். இதனால் இந்தாண்டு அவர் குழந்தையை தத்தெடுக்கவில்லையாம்.