சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
ரகுமான் நடித்த 'துருவங்கள் பதினாறு' படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'நரகாசூரன்'. அர்விந்த் சாமி, சந்தீப், ஆத்மிகா, ஸ்ரேயா, இந்திரஜித் ஆகியோர் நடித்துள்ள இந்தப்படத்தை முதலில் கவுதம் வாசுதேவ் மேனன் தயாரித்து வந்தார்.
ஆனால், தொடர்ந்து படத்தை முடிக்காமல் அவர் தாமதம் செய்ததால் கார்த்திக் நரேன் கடுப்பாகி தகராறில் ஈடுபட்டார். எனவே வேறு வழியில்லாமல் நரகாசூரன் படத்தயாரிப்பிலிருந்து கவுதம் மேனன் விலகிக் கொண்டார். தற்போது அந்தப்படத்தை ஷ்ரத்தா என்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனம் வாங்கி வெளியிட உள்ளது.
இந்நிலையில், நரகாசூரன் படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 31ஆம் தேதி 'நரகாசூரன்' படம் உலகமெங்கும் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ரிலீஸ் செய்யும் நேரத்தில் யாரும் பஞ்சாயத்து பண்ணாமல் இருக்க வேண்டும் என கலக்கத்தில் உள்ளார் கார்த்திக் நரேன்.