ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சந்தானத்தின் நிலைமை புலிவாலைப்பிடித்த கதையாகிவிட்டது. காமெடியனாக நடித்து வந்த அவர் ஒருகட்டத்தில் ஹீரோக்களைவிட அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருந்தார். காமெடியனாக மிகப்பெரிய உயரத்தில் இருந்தவருக்கு ஹீரோவாக நடிக்கும் ஆசை ஏற்பட்டதால் இப்போது கடும் சிக்கலில் இருக்கிறார்.
அவர் ஹீரோவாக நடித்து கடைசியாக வெளியான சக்கப்போடு போடு ராஜா படம் ஏற்படுத்திய நஷ்டம் ஒருபக்கம், அந்தப்படத்தினால் நஷ்டம் அடைந்தவர்களுக்கு இரண்டரை கோடி திருப்பிக்கொடுக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டிருக்கிறார் சந்தானம்.
அதனால் அவருடைய படங்கள் வெளியாவதில் சிக்கல் நீடித்துவருகிறது. சர்வர் சுந்தரம் படம் கூட வெளிவராமல் முடங்கிப்போனதன் காரணம் இதுவே.
இந்த நிலையில் ராம்பாலா இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற 'தில்லுக்கு துட்டு படத்தின் இரண்டாம் பாகத்தை அடுத்து வெளியிட முடிவு செய்துள்ளார். இந்த படத்தை செப்டம்பர் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு சென்ற மார்ச் மாதம் 1-ஆம் தேதி ஹைதராபாத்தில் துவங்கியது. 'தில்லுக்கு இரண்டாம் பாகத்தில் தீப்தி என்ற புதுமுகம் கதாநாயகியாக நடிக்கிறார் என்று சொல்லப்பட்டது.
இப்போது கேரளாவைச் சேர்ந்த ஏற்கெனவே சில மலையாள படங்களில் நடித்துள்ள ஷ்ரதா சிவதாஸ் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் என்ற தகவலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
கதைப்படி கதாநாயகி கேரக்டர் மலையாளம் பேசுவதுபோல் உருவாக்கப்பட்டுள்ளதால் மலையாள நடிகையான ஷ்ரதா சிவதாஸை தேர்வு செய்துள்ளனர்.