ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'கடம்பன்' படத்தை அடுத்து ஒரு வருடத்திற்குப் பிறகு ஆர்யா நடித்து அடுத்தவாரம் வெளிவர உள்ள படம் 'கஜினிகாந்த்'. 'ராஜா ராணி' படத்திற்கு பிறகு பெரிய வெற்றி எதுவும் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார் ஆர்யா. அதனால், இந்தப் படத்தின் வெற்றியைப் பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார் ஆர்யா.
'கஜினிகாந்த்' படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடந்த போது ஆர்யாவுக்கு படத்தின் மீதிருந்த ஆர்வத்தைப் பற்றி இயக்குனர் சந்தோஷ் பி ஜெயகுமார் மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டார். ஒரு படம் முடிந்த பின்னும் இயக்குனரைப் பற்றி நாயகனும், நாயகனைப் பற்றி இயக்குனரும் பாராட்டிப் பேசிக் கொள்ளும் அற்புதக் காட்சியை நேற்றும் காண முடிந்தது.
இயக்குனர் சந்தோஷ் பி ஜெயகுமார் பேசும் போது, “இந்தப் படத்தில் நடிக்கக் கேட்டதும் நான் இயக்கிய முதல் படத்தைக் கூடப் பார்க்காத ஆர்யா உடனே சம்மதித்தார். ஒரு வாரத்திற்குள்ளாக அனைத்தும் முடிவாகி படப்பிடிப்பிற்குச் சென்றுவிட்டோம். ஆர்யாவிற்கு படப்பிடிப்பு மதியம் இருந்தால் கூட அவரே போன் செய்து வீட்டில் போரடிக்கிறது காலையிலேயே படப்பிடிப்புக்கு வந்துவிடுகிறேன் என்று சொல்லி முன்னதாகவே வந்துவிடுவார்,” என்று பாராட்டினார்.
ஆர்யா போல அனைத்து ஹீரோக்களும் படப்பிடிப்பு முன்னதாகவே வந்துவிட்டால் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் எவ்வளவு மகிழ்ச்சியடையவார்கள்.