ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ் சினிமாவில் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்தி விட்டு ஏமாற்றியவர்களின் பட்டியலை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார் நடிகை ஸ்ரீரெட்டி. இவரது பட்டியலில் முருகதாஸ், ஸ்ரீகாந்த், லாரன்ஸ், சந்தீப் கிஷன், சுந்தர் சி... என பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றன.
மேலும் தான் வெளியிடும் பட்டியல்களை விட முன்னணியில் இருக்கும் பெரிய நடிகைகள் வாய் திறந்தால், அவர்களின் பட்டியலை கேட்டால் சேத்தே போய் விடுவீர்கள் என கூறியிருந்தார்.
ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டுகளை கூறி வருவதாக ஸ்ரீரெட்டி மீது விமர்சனமும் வைக்கப்படுகிறது. விஷால், ஆர்கே செல்வமணி, கார்த்தி போன்றோர் ஆதாரமில்லாத குற்றச்சாட்டு என கூறி உள்ளனர். ஆனால் தன்னிடம் ஆதாரம் இருப்பதாக ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.
டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறியிருப்பதாவது.... சினிமாவில் நடிகைகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் இது உண்மை. என்னிடம் ஆதாரம் உள்ளது. போட்டோ, சேட்டிங் போன்றவைகளை ஆதாரமாக வைத்துள்ளேன். போலீசார் உறுதியாக நடவடிக்கை எடுப்பதாக கூறினால் அந்த ஆதாரங்களை வெளியிட தயாராக உள்ளேன்.
இவ்வாறு ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.
கேமராவா வைக்க முடியும் : இதே ஸ்ரீரெட்டி, யூ-டியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், எல்லா புகாருக்கு ஆதாரம் இருக்கிறதா என கேட்கிறார்கள். நான் என்ன கேமராவை எனது மார்பிலோ அல்லது அந்த இடத்திலா வைக்க முடியும். இல்லை, சம்பந்தப்பட்டவர்கள் என்னுடன் செல்பி தான் எடுப்பார்களா...? உண்மை என்ன என்று கடவுளுக்கு தெரியும், அவர் சரியான தீர்ப்பை வழங்குவார் என கூறியுள்ளார்.