சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
தம்பி கார்த்தி நாயகனாக நடிக்க, அண்ணன் சூர்யா தயாரிப்பில் வெளிவந்துள்ள 'கடைக்குட்டி சிங்கம்' படத்தின் வரவேற்பிற்கு சூர்யா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இது குறித்து டுவிட்டரில், “மொத்த தியேட்டரும் சிரித்ததிலும், உணர்வுகளுடன் அவர்களை இணைத்துக் கொண்டதையும் பார்ப்பதற்கு ஆனந்தமாய் இருந்தது. மனப்பூர்வமாய் சிரித்தேன், கண்ணீரை நிறுத்த முடியவில்லை. பாண்டிராஜ் மற்றும் அவரது குழுவினருக்கு நன்றி. உன்னை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன் கார்த்தி. ரசிகர்களின் ஆதரவுக்கும், அன்புக்கும் எங்களது நன்றி,” எனக் கூறியுள்ளார்.
பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி, சாயிஷா, பிரியா பவானி சங்கர், அர்த்தனா, சத்யராஜ், சூரி மற்றும் பலர் நடித்து நேற்று வெளிவந்த 'கடைக்குட்டி சிங்கம்' படத்திற்கு பெண்களிடமும், குடும்பத்து ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தைப் பார்த்த பலரும் படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.