ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
காலா படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார் ரஜினி. சமீபத்தில் தான் டார்ஜிலிங்கில் ஒரு கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளார்கள். ரஜினி படத்தை இயக்குகிறார் என்கிறபோதே விறுவிறுப்பு எகிறியது. அதேநேரம் ரஜினியுடன் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா போன்ற இளைய தலைமுறை கலைஞர்கள் இணைந்துள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் தான் மலையாள நடிகர் பஹத் பாசிலும் இந்த படத்தில் நடிப்பதாக ஒரு செய்தி வெளியானது. தற்போது மணிரத்னம், தியாகராஜன் குமாரராஜா ஆகியோரது டைரக்சனில் நடித்து வரும் பஹத் பாசில், கார்த்திக் சுப்பராஜ் படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை தான். ஆனால் இந்த தகவலில் சிறிதும் உண்மையில்லை என்று மறுத்துள்ளார் கார்த்திக் சுப்பராஜ்.