சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
செக்கச் சிவந்த வானம் படத்தை முடித்த கையோடு, வெங்கட்பிரபு இயக்கும் படத்தில் நடிக்கிறார் சிம்பு. படத்திற்கு "மாநாடு" என தலைப்பு வைத்திருக்கிறார்கள். வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.
மாநாட்டில் நடிப்பது பற்றி சிம்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சிம்பு பேசியதாவது... வெங்கட்பிரபு உடன் படம் பண்ண வேண்டும் என்பது நீண்டநாள் ஆசை, அது நிறைவேறியிருக்கிறது. படத்தின் தலைப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. படத்தில் அரசியல் இருக்கிறது. ஆனால் நான் அரசியலுக்கு வருவதற்காக இந்தப்படம் என்று சொல்வது உண்மையல்ல.
படத்தில் ஒரு விஷயத்தை பேச வேண்டும் என்று நினைக்கும்போது அதை பேசியே ஆக வேண்டும், அதற்காக பயந்து போக கூடாது. பொதுவாக சினிமாவிற்கு நிறைய பிரச்னைகள் வந்து கொண்டு இருக்கின்றன. பாபா தொடங்கி இப்போது சர்கார் வரை தொடருகின்றன.
சர்கார் படத்தில் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் ஏன் வருகிறது என அன்புமணி ராமதாஸ் கேட்டிருந்தார். இதைப்பற்றி நான் இப்போது எது பேசினாலும் தவறாகிவிடும். ஆகவே, விவாத மேடையில் அன்புமணி இதுகுறித்து விவாதிக்க முன்வந்தால் நான் விவாதிக்க தயாராக உள்ளேன். எங்கு, எப்போது என்று அவரே சொல்லட்டும். ஒரு நடிகனாக பதில் அளிக்க தயாராக உள்ளேன்.