என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் சர்கார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கு கடந்த ஜூன் 21-ம் தேதி வெளியிடப்பட்டது. அதில் ஒரு போஸ்டரில் விஜய் புகைப்பிடித்த காட்சிகளும் இடம் பெற்று இருந்தன. புகைப்பிடிக்கும் காட்சியில் நடிக்க மாட்டேன் என விஜய் கூறிவிட்டு, இப்போது அதை மீறிவிட்டார் என அவர் மீது கண்டன குரல்களும் எழுந்தன.
சில தினங்களுக்கு முன்னர் பொது சுகாதாரதுறை, உடனடியாக அந்த போஸ்டரை நீக்க வேண்டும் எச்சரித்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட போஸ்டரை படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் டுவிட்டரில் நீக்கியது. இருந்தாலும் ஏற்கனவே வெளியான புகைப்பட ஸ்டில்களை விஜய் ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
இந்நிலையில் விஜய் புகைப்பிடிக்கும் காட்சியை எதிர்த்து சென்னையை சேர்ந்த வக்கில் ஒருவர் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதில், சர்கார் பர்ஸ்ட்லுக் போஸ்டரில் புகைப்பிடிக்கும் காட்சியை ஊக்கப்படுத்தும் வகையில் விளம்பரப்படுத்தியதற்கு விஜய், முருகதாஸ், தயாரிப்பாளர் ஆகியோர் தலா ரூ.10 கோடியை அடையாறு புற்று நோய் மருத்துவ மையத்திற்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என தமது மனுவில் கூறியிருந்தார்.