ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ராஜமவுலி இயக்கிய பாகுபலி, பாகுபலி-2 ஆகிய படங்கள் உலக அளவில் இந்திய படங்களுக்கு அங்கீகாரம் பெற்றுத்தந்தவை. இந்த படங்களைத் தொடர்ந்து, தற்போது ஜூனியர் என்டிஆர், ராம் சரணை வைத்து ஆர்ஆர்ஆர் என்றொரு படத்தை இயக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார் ராஜமவுலி.
இந்நிலையில், பாகுபலியில் தான் படமாக்கிய கதைக்கு முன்பு நடந்த விசயங்களை மூன்று பாகங்களாக உருவாக்கி படம் இயக்கப்போகிறாராம். அந்த படத்தை ராஜமவுலியுடன் இணைந்து தேவகட்டா என்பவரும் இயக்குகிறாராம்.
நெட்பிளிக்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில், பாகுபலி படத்தில் இடம்பெற்ற பாகுபலி, தேவசேனா, சிவகாமி, கட்டப்பா போன்ற முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களின் முந்தைய காலக்கட்டத்து கதை இடம்பெறப்போகிறதாம்.
இந்த தொடர் கதையில் பாகுபலியில் நடித்தவர்களே நடிக்கிறார்களா? இல்லை வேறு நடிகர்கள் நடிக்கிறார்களா? என்பது தெரிவிக்கப்படவில்லை.