ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ரஜினி நடித்த அனிமேஷன் படமான கோச்சடையான் படத்தை தயாரித்தது தொடர்பா மீடியா ஒன் குளோபல் நிறுவனத்திற்கு ஆட்பீரோ என்ற நிறுவனம் கடன் அளித்திருந்தது.
இந்தக் கடனுக்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாதம் அளித்திருந்ததாகவும், 'கோச்சடையான்' உரிமையை ஆட் பீரோ நிறுவனத்திற்கு வழங்க குளோபல் நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிகிறது. ஆனால் சொன்னபடி பட உரிமையை தரவில்லை, கொடுத்த கடனையும் திருப்பி செலுத்தவில்லை.
இதையடுத்து, ஆட் பீரோ நிறுவனம் கோர்ட் வரை சென்றது. இந்த வழக்கின் மீதான விசாரணையில் கடந்த பிரப்ரவரி மாதம், லதா ரஜினிகாந்த், ஆட்பீரோ நிறுவனத்திற்கு 3 மாதங்களில் பணத்தை திருப்பி கொடுக்க கெடு விதிக்கப்பட்டது. தொடர்ந்து ஏப்., 16-ம் தேதி நடந்த விசாரணையில், ஜூலை 3-க்குள் லதா ரஜினியோ அல்லது மீடியா ஒன் குளோபல் நிறுவனமோ, ஆட் பீரோ நிறுவனத்திற்கு பணத்தை திருப்பி செலுத்த உத்தரவிட்டப்பட்டது.
ஆனால் சொன்ன தேதியில் பணத்தை லதா திருப்பி செலுத்தவில்லை. இதனால் இந்த வழக்கு இன்று மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. எப்போது பணத்தை கொடுப்பீர்கள் என லதாவிற்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியதோடு, வருகிற 10-ம் தேதிக்குள் பணத்தை செலுத்த வேண்டும், இல்லாவிட்டால் நடவடிக்கை பாயும் என எச்சரித்துள்ளது.