ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தெய்வதிருமகள் படத்தின் மூலம் குணசித்ர நடிகையாக அறிமுகமானவர் ரித்திகா ஸ்ரீநிவாஸ். நாடக நடிகையான இவர் இப்போது பிசியான திரைப்பட நடிகை. வழக்கு எண் படத்தில் திமிர் பிடித்த பணக்கார பெண்ணாக நடித்ததன் மூலம் கவனம் பெற்றார். அதன் பிறகு ஆரோகணம், தீயா வேலை செய்யணும் குமாரு, சிங்கம் 2, பிரியாணி, நிமிர்ந்து நில், சரவணன் இருக்க பயமேன், உள்பட பல படங்களில் நடித்தார். நேற்று வெளியான டிக் டிக் டிக் படத்தில் ராணுவ அதிகாரியாக நடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
டிக் டிக் டிக் படத்தில் எனது நடிப்பை எல்லோரும் பாராட்டும்போது சந்தோஷமாக இருக்கிறது. அடுத்து இரண்டு மலையாளம் படத்தில் கமிட்டாகியிருக்கிறேன். வெப் சீரீஸ்களிலும் நடிக்கிறேன். எவ்வளவு நேரம் திரையில் என் கதாபத்திரம் வரும் என்பது முக்கியமில்லை. என்ன கேரக்டர் என்பது முக்கியமில்லை, கதையை ஒட்டி நான் இருக்கின்றேனா என்பது தான் முக்கியம். படத்தில் 5 நிமிடம் வந்தாலும் என் பாத்திரம் பேசப்பட வேண்டும்.
சரிதா, சுஜாதா, படாபட் ஜெயலெட்சுமி இவர்கள் பல கதாபாத்திரத்தில் நடித்து தான் ஹீரோயினாக மாறினார்கள். ஒரு கதாநாயகனுக்கு வில்லன் தான் இருக்கனும் என்று நினைக்கிறார்கள். பெண்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வில்லனை வில்லியாக மாற்றலாம். வில்லன்களை குறைத்து வில்லியை அதிகமாக்குங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். எனக்கு வில்லியாக நடிப்பதில் ஆர்வம் அதிகம். காரணம் அதில்தான் நடிப்பை அதிகமாக வெளிப்படுத்த முடியும்.
திரைப்படத்துறை மீதான பாலியல் குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை. எல்லாத்துறையிலும் பெண்கள் சந்திக்கிற பிரச்சினைகளை திரைத்துறையிலும் சந்திக்கிறார்கள், ஆனால் திரைத்துறையை மட்டும் பெரிது படுத்துகிறார்கள். எனக்கு தெரிந்து திரைப்படத்துறையில்தான் பெண்களுக்கு பாதுகாப்பு அதிகம். வீட்டிலிருந்து கிளம்பியது முதல் படப்படிப்பு முடிந்து வீட்டில் கொண்டு வந்து விடுவது வரையிலான பாதுகாப்பு வேறெந்த துறையிலும் இல்லை. தெரிந்தே தவறு செய்து விட்டு திரைத்துறை சரியில்லை என்று ஆடையை களைந்து போராட்டம் நடத்துவதில் எந்த பயனும் இல்லை என்கிறார் ரித்திகா ஸ்ரீநிவாஸ்.