வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் |
கிண்டல் செய்கிறேன் பேர்வழி என பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் எதையாவது பதிவிட்டு, சிலர் வம்பில் மாட்டி கொள்வார்கள். இதில் அடிக்கடி சிக்குபவர் நடிகை கஸ்தூரி. அப்படித்தான், 18 எம்எல்ஏ.,க்களின் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் நேற்று நீதிபதிகள் மாறுப்பட்ட கருத்தை தெரிவித்ததால் மூன்றாவது அமர்வு நீதிபதிக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக டுவிட்டரில் கருத்து பதிவிட்ட நடிகை கஸ்தூரி, "இரு வேறுபட்டு தீர்ப்பு சொல்லிட்டாங்களாமே. 18-ஐ பிரித்து ஆளுக்கு ஒம்போதா? ஆஆங்!" எனக் குறிப்பிட்டு, இரு திருநங்கைகளின் போட்டோவையும் இணைத்திருந்தார்.
இது திருநங்கைகளை அவமதிக்கும் வகையில் உள்ளது என பலர் சமூக வலைதளங்களில் கண்டனங்களை பதிவு செய்ய, முதலில் அந்த போட்டோவை டுவிட்டரிலிருந்து நீக்கியவர், பின்னர் அந்த பதிவையே முழுவதுமாக நீக்கினார். அதோடு தனது பதிவிற்கு டுவிட்டரில் மன்னிப்பும் கோரியுள்ளார்.
அதில், ஸ்டாண்ட் அப் என்று ஒரு வகை உண்டு. கொஞ்சம் எல்லைகளை வளைக்கும் காமெடி அது. பொறுப்பற்ற காமெடி தான், அது தான் அதன் சிறப்பே. இவ்வகை லொள்ளுகள் சிரிக்க மட்டுமே, அறிக்கைகள் அல்ல. ஸ்ரீதேவி - சன்னி லியோன் பற்றி நான் பார்வேர்டு செய்த கமெண்டும், இன்று நான் போட்ட கமெண்டும் அவ்வகையை சேர்ந்தவை.
இது போன்ற குறும்பும், தெனாவட்டும் கலந்த கமெண்டுகளை அடிக்க கண்டிப்பாக எனக்கு இந்த இடம் உகந்ததல்ல என்று புரிந்தது. இங்கு பகடி செய்வதில் கூட பாகுபாடு உள்ளது. சிலரை மட்டுமே அடிக்கலாம். யார் மனதையும் புண்படுத்தியிருந்தால் மனதில் ஆழத்தில் இருந்து மன்னிக்க வேண்டுகிறேன்.
இவ்வாறு கஸ்தூரி பதிவிட்டுள்ளார்.