தள்ளிப் போன “ஜனநாயகன், டாக்சிக்” ; 1000 கோடி முடக்கம்? | 'மைதிலி என்னை காதலி' நடிகர் மறைவு: டி.ராஜேந்தர் இரங்கல் | 'கே. சங்கர் 100' : நூற்றாண்டு கால இந்திய சினிமாவின் சிற்பிகளில் ஒருவர் | தள்ளிப்போனது டாக்சிக்: அந்த இடைவெளியில் வேறு படங்கள் வருமா? | இது, இரண்டாவது இன்னிங்ஸா? சென்னையில் பாவனா பேட்டி | திருமண வரவேற்பு : வேட்டி சட்டையில் விஜய், புடவையில் ராஷ்மிகா | பான் இந்தியா படங்களை தள்ளி வைப்பது சரியா? | 'மா இன்டி பங்காரம்' படப்பிடிப்பு தளத்தில் ஹோலி பண்டிகையை கொண்டாடிய சமந்தா | தேவிஸ்ரீ பிரசாத்துக்கு பதிலாக தமன் ; பவன் கல்யாண் படத்தின் இசையில் மாற்றம் | கேரள அரசு சினிமா ஸ்டுடியோ திறப்பு விழாவை புறக்கணித்த மலையாள திரைப்பட சங்கங்கள் |

தனியொரு மனிதனாக அரசையும், அரசியல்வாதிகளையும் எதிர்த்து போராடி வருகிறவர் டிராபிக் ராமசாமி. நம் காலத்திலேயே வாழும் நிஜ ஹீரோ. அவரின் வாழ்க்கை கதை டிராபிக் ராமசாமி என்ற பெயரிலேயே தயாராகி உள்ளது. எஸ்.ஏ.சந்திரசேகர், டிராபிக் ராமசாமியாக நடித்துள்ளார். அவரது மனைவியாக ரோகினி நடித்துள்ளார். பிரகாஷ்ராஜ், விஜய் ஆண்டனி, விஜய் சேதுபதி ஆகியோர் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளனர். வருகிற 22ந் தேதி படம் வெளிவருகிறது.
இதன் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. விழாவில் பேசிய இயக்குனரும், எஸ்.ஏ.சந்திரசேகரின் மாணவருமான ஷங்கர், தான் டிராபிக் ராமசாமியின் வாழ்க்யை ரஜினி நடிப்பில் இயக்க முடிவு செய்திருந்ததாக கூறினார். மேலும் அவர் கூறியதாவது:
இந்த டிராபிக் ராமசாமி என்னையும் பாதித்த மனிதர். அவருக்குள் ஒரு ஹீரோயிசம் இருக்கும். அதைப் பார்த்து நான் மனசுக்குள் கை தட்டியதுண்டு. இவர் கதையைப் படமாக்க நானும் ஆசைப்பட்டேன். இவர் கத்தி எடுக்காத இந்தியன். வயசான அந்நியன் அம்பி. இவர் கதையில் ரஜினியை வைத்து படம் எடுக்க நினைத்தேன். எஸ்.ஏ.சி. நடிக்கிறார் என்று அறிவிப்பு வந்ததும் வட போச்சே என்ற ஏமாற்றம், இருந்தாலும் மகிழ்ச்சி. இந்தப் படத்தைப் பார்க்க காத்திருக்கிறேன்" என்றார்.




