ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த 'காலா' படத்திற்கு பல்வேறு விதமான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ரஞ்சித் ஆதரவாளர்கள் படத்தை ஆகா, ஓகோவென பாராட்டி வருகிறார்கள். அற்புதமான கருத்துக்களை ரஞ்சித் படத்தில் வைத்திருக்கிறார் என விமர்சித்து வருகிறார்கள்.
ரஜினிகாந்தின் அறிமுகக் காட்சியையே ரஞ்சித் சொதப்பியிருக்கிறார், 'வேங்கை மவன் ஒத்தையில நிக்கேன்' வசனத்தை வீணாக்கி விட்டார் என ரஜினிகாந்த் ரசிகர்கள் கோபப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். படத்தில் குறியீடுகளாக அம்பேத்காரை முன்னிலைப்படுத்தியும், ராமர், வினாயகர், கிருஷ்ணர் ஆகிய கடவுள்களை எதிர்த்தும் உள்ளார் என்றும் பக்தியாளர்கள் கொதித்துப் போய் உள்ளார்கள்.
நடுநிலைவாதிகள் இந்தப் படத்தை ரஜினிகாந்த் அத்தனை முறை பார்த்தேன் என்று சொன்னாரே, படம் அருமையாக உள்ளது என்று வேறு பாராட்டினாரே, அப்புறம் ஏன் போராடக் கூடாது என்று நிஜத்தில் வசனம் பேசினார் என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
முதலில் படத்தில் உள்ள கருத்துக்களை ரஜினிகாந்த் புரிந்து கொண்டாரா, அப்படி புரிந்து கொண்டிருந்தால் அவர் பேட்டிகளில் விஷக் கிருமிகள், சமூக விரோதிகள் என்று சொல்லியிருக்க மாட்டாரே என்கிறார்கள். ஆன்மீக அரசியல் நடத்த உள்ளேன் என்று சொல்பவர், ஆன்மீகத்தை எதிர்க்கும் காட்சிகளில் எப்படி நடித்தார் என்றும் கேள்வி எழுப்புகிறார்கள்.
இந்தப் படம் ரஜினி ரசிகர்களுக்கான, மக்களுக்கான படமல்ல, ரஜினிகாந்த்திற்கான படம், இந்தப் படத்தை மீண்டும் மீண்டும் பார்த்து அவர் என்ன பேசியிருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ளட்டும் என சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகிறார்கள்.