மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து மக்கள் நடத்திய 100வது நாள் போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் மரணம் அடைந்தனர். அதன் பின் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க அரசியல் தலைவர்கள், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் தூத்துக்குடி சென்றர்.
இதில் கமல்ஹாசன் சென்றது கூட சர்ச்சையைக் கிளப்பவில்லை. ஆனால், ரஜினிகாந்த் சென்றது சர்ச்சையைக் கிளப்பியது. தூத்துக்குடி விமான நிலையத்தில் கார் மீது நின்று ரசிகர்களுக்கு அவர் கை அசைத்தது, சென்னை வந்து பத்திரிகையாளர்களிடம் ஆவசேமாகப் பேசியது சர்ச்சையானது. அதன் பின் ஆவேசமாகப் பேசியதற்கு ரஜினிகாந்த் வருத்தம் தெரிவித்தார்.
இதனிடையே, நேற்று எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல், மீடியாக்களுக்கும் தெரியாமல் தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட மக்களை அந்த ஊரில் பைக்கில் சென்று நள்ளிரவில் விஜய் சந்தித்துள்ளார். அந்த நேரத்தில் மொபைல் போன்களில் சிலர் எடுத்த புகைப்படங்கள் மட்டுமே வெளியாகின. விஜய்யின் இந்த அமைதியான பரபரப்பில்லாத பயணம் இன்று காலை முதலே சமூக வலைத்தளங்களில் பலரது பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்க விஜய் சென்ற விதம் அவரது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.