ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! | 'பைசன்' படத்தை பாராட்டிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை! | ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன் | அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! | கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ அசத்தல் நடனம் ! வைரலாகும் வீடியோ!! | கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் |

தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து மக்கள் நடத்திய 100வது நாள் போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் மரணம் அடைந்தனர். அதன் பின் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க அரசியல் தலைவர்கள், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் தூத்துக்குடி சென்றர்.
இதில் கமல்ஹாசன் சென்றது கூட சர்ச்சையைக் கிளப்பவில்லை. ஆனால், ரஜினிகாந்த் சென்றது சர்ச்சையைக் கிளப்பியது. தூத்துக்குடி விமான நிலையத்தில் கார் மீது நின்று ரசிகர்களுக்கு அவர் கை அசைத்தது, சென்னை வந்து பத்திரிகையாளர்களிடம் ஆவசேமாகப் பேசியது சர்ச்சையானது. அதன் பின் ஆவேசமாகப் பேசியதற்கு ரஜினிகாந்த் வருத்தம் தெரிவித்தார்.
இதனிடையே, நேற்று எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல், மீடியாக்களுக்கும் தெரியாமல் தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட மக்களை அந்த ஊரில் பைக்கில் சென்று நள்ளிரவில் விஜய் சந்தித்துள்ளார். அந்த நேரத்தில் மொபைல் போன்களில் சிலர் எடுத்த புகைப்படங்கள் மட்டுமே வெளியாகின. விஜய்யின் இந்த அமைதியான பரபரப்பில்லாத பயணம் இன்று காலை முதலே சமூக வலைத்தளங்களில் பலரது பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்க விஜய் சென்ற விதம் அவரது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.




