ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து மக்கள் நடத்திய 100வது நாள் போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் மரணம் அடைந்தனர். அதன் பின் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க அரசியல் தலைவர்கள், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் தூத்துக்குடி சென்றர்.
இதில் கமல்ஹாசன் சென்றது கூட சர்ச்சையைக் கிளப்பவில்லை. ஆனால், ரஜினிகாந்த் சென்றது சர்ச்சையைக் கிளப்பியது. தூத்துக்குடி விமான நிலையத்தில் கார் மீது நின்று ரசிகர்களுக்கு அவர் கை அசைத்தது, சென்னை வந்து பத்திரிகையாளர்களிடம் ஆவசேமாகப் பேசியது சர்ச்சையானது. அதன் பின் ஆவேசமாகப் பேசியதற்கு ரஜினிகாந்த் வருத்தம் தெரிவித்தார்.
இதனிடையே, நேற்று எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல், மீடியாக்களுக்கும் தெரியாமல் தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட மக்களை அந்த ஊரில் பைக்கில் சென்று நள்ளிரவில் விஜய் சந்தித்துள்ளார். அந்த நேரத்தில் மொபைல் போன்களில் சிலர் எடுத்த புகைப்படங்கள் மட்டுமே வெளியாகின. விஜய்யின் இந்த அமைதியான பரபரப்பில்லாத பயணம் இன்று காலை முதலே சமூக வலைத்தளங்களில் பலரது பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்க விஜய் சென்ற விதம் அவரது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.




