சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
நடிகர் ரஜினி நடித்து வரும் 7ம் தேதி திரைக்கு வரவிருக்கும் காலா படத்தின் உரிமையை வாங்கி இருக்கும் லைகா நிறுவனம், அதை தமிழகத்தின் பல பகுதிகளுக்கும், பகுதி வாரியாக விற்பனையைத் துவக்கி இருக்கிறது.
அதன்படி, சென்னை ஏரியாவின் விநியோக உரிமையை எஸ்.பி.ஐ. சினிமாஸ் பெற்றுள்ளது. சேலம் ஏரியாவின் உரிமையை 7ஜி நிறுவனத்தின் சிவா பெற்றுள்ளார். மதுரை, ராமநாதபுரம் ஏரியாக்களின் விநியோக உரிமையை, கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் பைனான்சியர் அன்பு செழியன்.
சில மாதங்களுக்கு முன், இயக்குநர் சசிகுமாரின் மைத்துனர் அசோக்குமார், தற்கொலை செய்து கொண்டு இறந்து போனார். அதற்கு அன்பு செழியனின் கொடுமைதான் காரணம் என, அவர் கடிதமும் எழுதி விட்டுச் சென்றார். அது தொடர்பான வழக்கில், அன்புச் செழியன் இன்னமும் தலைமறைவாகத்தான் இருக்கிறார். போலீசார் அவரை இன்னமும் தேடிக் கொண்டு இருக்கின்றன.
இந்நிலையில், மதுரை, ராமநாதபுரம் ஏரியாக்களுக்கான காலா படத்தின் விநியோக உரிமையை வாங்கி இருப்பது, சசிக்குமார் தரப்பினரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. சினிமாத் துறை பிரபலங்களும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.