ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சிவாஜி பேரன் விக்ரம் பிரபு கும்கி படத்தின் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து நடித்து வருகிறார். தொடர் வெற்றிகளை கொடுத்த அவர் தற்போது தொடர் தோல்விகளை கொடுத்து வருகிறார். இது என்ன மாயம், வாகா, வீரசிவாஜி, சத்ரியன், நெருப்புடா, பக்கா படங்கள் அவருக்கு கை கொடுக்கவில்லை. தற்போது துப்பாக்கி முனை, அசுரகுரு படங்களில் நடித்து வருகிறார்.
காமெடி கலந்த கேரக்டர்கள் தனக்கு செட்டாகவில்லை. அதுதான் தோல்விகளுக்கு காரணம் என்று கருதுகிறார். அவர் சீரியசாக நடித்த கும்கி, இவன் வேறமாதிரி, அரிமா நம்பி, சிகரம் தொடு படங்கள் வெற்றி பெற்றன. இதனால் அடுத்து ஒரு சீரியசான படத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறார்.
அந்தப் படத்தை விஜய் ஆண்டனி நடித்த சலீம் படத்தை இயக்கிய நிர்மல் குமார் இயக்குகிறார். அவர் தற்போது சதுரங்க வேட்டை இரண்டாம் பாகத்தை இயக்கி முடித்திருக்கிறார். அடுத்து அல்லு அர்ஜுன் நடிக்கும் தெலுங்கு படத்தை இயக்க இருந்தவர் அதை ஒதுக்கி வைத்து விட்டு விக்ரம் பிரபுவை இயக்குகிறார். படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை 2008-ம் ஆண்டு தமிழ்நாட்டில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகிறது. அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.