ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அஜித் பற்றி எந்த ஒரு தகவலைச் சொன்னாலும் அதை அஜித் ரசிகர்கள் உடனே கொண்டாட ஆரம்பித்துவிடுவார்கள். ரசிகர் மன்றம் வேண்டாம், பத்திரிகையாளர்கள் சந்திப்பு வேண்டாம் என பல வருடங்களாக ஒரு வைராக்கியத்துடன் இருந்து வரும் அஜித் எங்காவது வெளியில் செல்லும் போது ரசிகர்கள் வந்து சந்தித்தால் அவர்களிடம் துளியும் கோபப்படாமல் முடிந்தவரை அனைவருடனும் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வதை வழக்கமாகவே வைத்திருக்கிறார்.
அதிலும் செல்பி யுகத்தில் பலரும் அவருடன் செல்பி எடுத்துக் கொள்ள ஆசைப்படுவதும் அதிகமாகிவிட்டது. அதற்கும் முகம் சுளிக்காமல் அனைவருடனும் எடுத்துக் கொள்கிறார் என ஒரு திரையுலகப் பிரபலம் தெரிவித்திருக்கிறார்.
விஸ்வாசம் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து முடிந்துள்ளது. அங்கிருந்து சென்னைக்கு விமானம் மூலம் வந்துள்ளார் அஜித். அப்போது அவருடன் விமான பைலட் முதல் சாதாரண பயணி வரை சுமார் 200 பேர் வரை செல்பி எடுத்துக் கொண்டார்களாம். இது பற்றிய தகவலை அவருடன் பயணித்த இசையமைப்பாளர் தமன் தெரிவித்துள்ளார்.
“கேப்டன்கள் முதல் பயணிகள் வரை 100க்கும் மேல் 200 பேர் வரை அன்பான அஜித்துடன் இன்று செல்வி எடுத்துக் கொண்டனர். சாதாரண மனிதர்களிடமும் மிகவும் அன்பாகவும், எளிமையான அணுகுமுறையுடனும் அவர் பழகியது சிறப்பு,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.