சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
பைரவா படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் படத்தில் மீண்டும் விஜய்யுடன் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். இந்த நிலையில், நடிகையர் திலகம் படத்தின் வெற்றியை சமீபத்தில் அப்படக்குழுவினருடன் கொண்டாடியிருக்கிறார்.
அப்போது அவர் பேசும்போது, நடிகையர் திலகம் படத்தில் நான் நன்றாக நடித்திருப்பதாக அனைவருமே சொன்னார்கள். என்றாலும், எனது நடிப்பை மக்களிடம் கொண்டு போய் சேர்த்தது மீடியாக்கள்தான். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த படத்திற்கு பிறகு என் மீதான மற்றவர்களின் பார்வையே மாறியிருக்கிறது. இதுவரை சாதாரணமான கதைகளுக்கு என்னை ஒப்பந்தம் செய்ய வந்தவர்கள் கூட இப்போது, கதையின் நாயகியாக பார்க்கும் நிலை உருவாகியிருக்கிறது. அந்த அளவுக்கு சாவித்ரி வேடத்தில் நடித்தது என்னை ஒரு நடிகையாக அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றுள்ளது என்கிறார் கீர்த்தி சுரேஷ்.