ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சசிகுமார், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடித்த 'குட்டிப்புலி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் முத்தையா. அதற்கடுத்து 'கொம்பன், மருது, கொடிவீரன்' என அவர் இதுவரை இயக்கிய நான்கு படங்களுமே சாதியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்கள் தான். ஒரு குறிப்பிட்ட சாதியின் பெருமையைச் சொல்லும் படங்களையே அவர் தொடர்ந்து எடுத்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் தற்போதைக்கு சாதியை மையமாக வைத்து படங்களை இயக்கி வருவது முத்தையா மட்டும்தான். கடைசியாக அவர் இயக்கிய 'மருது, கொடி வீரன்' ஆகிய படங்கள் தோல்வியடைந்தன. இருந்தாலும் தன்னுடைய அடுத்த படத்தையும் சாதிப் படமாகவே அவர் உருவாக்க உள்ளார் என்பது அவர் படத்திற்காக வைத்திருக்கம் தலைப்பிலிருந்தே எளிதில் புரிந்திருக்கலாம்.
'தேவராட்டம்' என்ற அந்தப் படத்தின் தலைப்பில் கவுதம் கார்த்திக் நாயகனாக நடிக்க உள்ளார். அந்தக் கதையில் கவுதமை நடிக்க வைப்பதிலும் ஒரு சாதிய உள்ளீடு இருக்கிறது. சாதி சம்பந்தமான தலைப்புகளை வைப்பதை பலரும் தவிர்த்துவிட்டார்கள். படங்களில் சாதிப் பெயர்கள் இடம் பெறாத அளவிற்குத்தான் காட்சிகளையும் அமைக்கிறார்கள்.
இப்படத்திற்கு சமூக வலைத்தளங்களில் இப்போதே ரசிகர்கள் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். ஆபாசப் படம் அல்லது சாதிப் படம் இவற்றை எடுப்பதே இந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் வேலையாகிப் போய்விட்டது என அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.