ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ்நாட்டில் தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்டு வந்த பிலிம் சிட்டி அங்கு டைடல் பார்க் வந்ததால் மூடப்பட்டது. ஆண்டுதோறும் பல கோடி ரூபாயை அரசுக்கு கேளிக்கை வரி வருவாயாகவும், மத்திய அரசுக்கு வருமான வரியாகவும், ஜிஎஸ்டி வரியாகவும் தரும் தமிழ்த் திரைப்படத் துறையினருக்கு சென்னையில் படப்பிடிப்பு நடத்த பெரிய வசதிகள் எதுவும் இல்லை.
இங்கு அரசு இடங்களிலோ, பொது இடங்களிலோ படப்பிடிப்பு நடத்த அனுமதி வாங்க வேண்டும் என்றால் அவ்வளவு சுலபத்தில் கிடைக்காது. மேலும், சென்னையில் இருந்த பல ஸ்டுடியோக்கள் மூடப்பட்டு தற்போது ஏவிஎம், பிரசாத் ஆகிய இரண்டு ஸ்டுடியோக்கள் மட்டுமே இயங்கி வருகின்றன. அங்கும் திரைப்படப் படப்பிடிப்புகளை விட டிவி படப்பிடிப்புகள்தான் அதிகம் நடக்கின்றன. சமீபகாலத்தில் பூந்தமல்லியில் உள்ள இவிபி ஸ்டுடியோவில்தான் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
ரஜினிகாந்த்தின் காலா, 2.0 ஆகிய படங்களின் படப்பிடிப்பு அங்குதான் அதிகம் நடைபெற்றது. ஆனால், அஜித், விஜய் உள்ளிட்டோரின் படங்களின் படப்பிடிப்பு தமிழ்நாட்டில் நடப்பதை விட ஹைதராபாத்தில்தான் அதிகம் நடக்கிறது. தற்போது கூட விஸ்வாசம் படப்பிடிப்பு ஹைதராபாத்தில்தான் நடைபெற்று வருகிறது. அங்கு வட சென்னை போன்ற செட்டை உருவாக்கி படப்பிடிப்பு நடத்தி வருகிறார்கள்.
தமிழ்ப் படங்களின் படப்பிடிப்புகளை தேவை இருந்தால் மட்டும் வெளிமாநிலங்களில் நடத்தலாம், இல்லை என்றால் தமிழ்நாட்டிலேயே நடத்த வேண்டும் என பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கேட்டுக் கொண்டுள்ளார். இதன் மூலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் பிழைக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தொழிலாளர்களின் குரல் அஜித்திற்குக் கேட்டு, அடுத்த கட்ட படப்பிடிப்பு அவர் தமிழ்நாட்டில் நடத்த வேண்டும் என தயாரிப்பாளரிடம் சொல்வாரா என இங்குள்ள தொழிலாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.