சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
நடந்த உள்நாட்டு போரில் இலங்கை ராணுவத்தினரால் கொல்லப்பட்ட தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் இசைப்பிரியாவின் வாழ்க்கையை மையமாக வைத்து போர்க்களத்தில் ஒரு பூ என்ற படம் தயாரானது.
இதனை குருநாத் என்பவர் தயாரித்தார். கு.கணேசன் என்பவர் இயக்கி இருந்தார். இந்த படத்தை எதிர்த்து வழக்கு தொரடப்பட்டது. இசைப்பிரியாவின் குடும்பத்தினரும் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதை எதிர்த்து தயாரிப்பாளர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த நிலையில் போர்க்களத்தில் ஒரு பூ படக்குழுவினர், 18.05.2009 என்ற படத்தை உருவாக்கி உள்ளனர். இந்தப் படம் நாளை மறுநாள் வெளிவருகிறது. இதில் சுபாஷ் சந்திர போஸ், பிரபாகரன், நாகிநீடு, தான்யா, ஜேக்கப், ஸ்ரீராம், பாலாஜி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இளையராஜா இசையமைத்துள்ளார். மு.மேத்தா, பழனிபாரதி, நா.முத்துக்குமார் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். பார்த்திபன் மற்றும் சுப்பிரமணியன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். இதனை குருநாத் என்பவர் தயாரித்துள்ளார். கு.கணேசன் இயக்கியுள்ளார்.
ஏற்கெனவே தயாரான போர்களத்தில் ஒரு படத்தின் காட்சிகளை பயன்படுத்தியும், புதிதாக சில காட்சிகளை படம்பிடித்தும் இந்த புதிய படத்தை உருவாக்கி இருப்பதாகவும், இசைப்பிரியாவின் கதை என்பதை மாற்றி ஒரு சாதாரண பெண்ணின் கதையாக மாற்றி இந்தப் படத்தை வெளியிடுவதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் இதனை படத்தரப்பு வலுவாக மறுக்கிறது. "இது முழுக்க முழுக்க புதிய படம், அந்தப் படத்தில் பணியாற்றிய குழுவினர் இதிலும் பணியாற்றியுள்ளனர்" என்கிறார் இயக்குனர் கணேசன்.