கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா | மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி | குட் பேட் அக்லி... இளையராஜா பாடல் விவகாரம் : மனு தள்ளுபடி | நடிகர் திலீப்பின் ராசி... தர்ஷனுக்கும் கை கொடுக்குமா? டிசம்பர் 11ல் தெரியும் | மோகன்லாலை மீண்டும் இயக்கும் தொடரும் பட இயக்குனர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன் | ‛பார்டர் 2'வில் தில்ஜித் தோசன்ஜ் முதல் பார்வை வெளியீடு | 75 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' | சமந்தாவை வரவேற்ற கணவர் குடும்பத்தார் |

பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் காலமானார். அவருக்கு வயது 71. மூச்சு திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார் பாலகுமாரன். இந்நிலையில் மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது.
தஞ்சை, திருகாட்டுப்பள்ளி அருகே உள்ள பழமார்நேரி கிராமத்தில், 1946ம் ஆண்டு பிறந்தவர் பாலகுமாரன். நூற்றுக்கணக்கான சிறுகதைகள், நாவல்களை எழுதியுள்ளார். இதில் மெர்க்குரி பூக்கள், இரும்பு குதிரைகள் உள்ளிட்டவை மிகவும் பிரபலம்.
எழுத்தாளராக மட்டுமல்லாது சினிமாவிலும் பணியாற்றி இருக்கிறார். "நாயகன், குணா, ஜென்டில்மேன், பாட்ஷா, காதலன், ஜீன்ஸ், முகவரி, சிட்டிசன், மன்மதன், வல்லவன், புதுப்பேட்டை" உள்ளிட்ட பல படங்களுக்கு வசனங்கள் மற்றும் திரைக்கதை எழுதியுள்ளார்.
1988-ம் ஆண்டு பாக்யராஜ், ஷோபனாவை வைத்து "இது நம்ம ஆளு" என்ற படத்தையும் இயக்கி உள்ளார்.