விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ | விரைவில் 'லக்கி பாஸ்கர் 2': வெங்கி அட்லூரி அப்டேட் | கூலி திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாவதில் புதிய சிக்கல்? | காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி | படம் என்ன ஜானர் என்று ரிலீஸுக்கு முன்பே சொல்லிவிடுங்கள் ; சசிகுமார் வேண்டுகோள் | 'தொடரும்' கெட்டப்பில் புரோமோ வீடியோவுடன் பிக்பாஸ் சீசன் 7 அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால் | இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் மொத்தமாக நீக்கிய ரன்வீர் சிங் ; ரசிகர்கள் கவலை | சூர்யா பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் தெலுங்கு 'அயன்' | அசோக் செல்வன் புதிய பட அப்டேட்! | 'பையா' பட தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகிறது! |
பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் காலமானார். அவருக்கு வயது 71. மூச்சு திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார் பாலகுமாரன். இந்நிலையில் மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது.
தஞ்சை, திருகாட்டுப்பள்ளி அருகே உள்ள பழமார்நேரி கிராமத்தில், 1946ம் ஆண்டு பிறந்தவர் பாலகுமாரன். நூற்றுக்கணக்கான சிறுகதைகள், நாவல்களை எழுதியுள்ளார். இதில் மெர்க்குரி பூக்கள், இரும்பு குதிரைகள் உள்ளிட்டவை மிகவும் பிரபலம்.
எழுத்தாளராக மட்டுமல்லாது சினிமாவிலும் பணியாற்றி இருக்கிறார். "நாயகன், குணா, ஜென்டில்மேன், பாட்ஷா, காதலன், ஜீன்ஸ், முகவரி, சிட்டிசன், மன்மதன், வல்லவன், புதுப்பேட்டை" உள்ளிட்ட பல படங்களுக்கு வசனங்கள் மற்றும் திரைக்கதை எழுதியுள்ளார்.
1988-ம் ஆண்டு பாக்யராஜ், ஷோபனாவை வைத்து "இது நம்ம ஆளு" என்ற படத்தையும் இயக்கி உள்ளார்.