'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா |
பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் காலமானார். அவருக்கு வயது 71. மூச்சு திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார் பாலகுமாரன். இந்நிலையில் மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது.
தஞ்சை, திருகாட்டுப்பள்ளி அருகே உள்ள பழமார்நேரி கிராமத்தில், 1946ம் ஆண்டு பிறந்தவர் பாலகுமாரன். நூற்றுக்கணக்கான சிறுகதைகள், நாவல்களை எழுதியுள்ளார். இதில் மெர்க்குரி பூக்கள், இரும்பு குதிரைகள் உள்ளிட்டவை மிகவும் பிரபலம்.
எழுத்தாளராக மட்டுமல்லாது சினிமாவிலும் பணியாற்றி இருக்கிறார். "நாயகன், குணா, ஜென்டில்மேன், பாட்ஷா, காதலன், ஜீன்ஸ், முகவரி, சிட்டிசன், மன்மதன், வல்லவன், புதுப்பேட்டை" உள்ளிட்ட பல படங்களுக்கு வசனங்கள் மற்றும் திரைக்கதை எழுதியுள்ளார்.
1988-ம் ஆண்டு பாக்யராஜ், ஷோபனாவை வைத்து "இது நம்ம ஆளு" என்ற படத்தையும் இயக்கி உள்ளார்.