'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! | தேவி ஸ்ரீ பிரசாதிற்கு ஜோடியாகும் நடிகை யார் தெரியுமா? |
பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் காலமானார். அவருக்கு வயது 71. மூச்சு திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார் பாலகுமாரன். இந்நிலையில் மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது.
தஞ்சை, திருகாட்டுப்பள்ளி அருகே உள்ள பழமார்நேரி கிராமத்தில், 1946ம் ஆண்டு பிறந்தவர் பாலகுமாரன். நூற்றுக்கணக்கான சிறுகதைகள், நாவல்களை எழுதியுள்ளார். இதில் மெர்க்குரி பூக்கள், இரும்பு குதிரைகள் உள்ளிட்டவை மிகவும் பிரபலம்.
எழுத்தாளராக மட்டுமல்லாது சினிமாவிலும் பணியாற்றி இருக்கிறார். "நாயகன், குணா, ஜென்டில்மேன், பாட்ஷா, காதலன், ஜீன்ஸ், முகவரி, சிட்டிசன், மன்மதன், வல்லவன், புதுப்பேட்டை" உள்ளிட்ட பல படங்களுக்கு வசனங்கள் மற்றும் திரைக்கதை எழுதியுள்ளார்.
1988-ம் ஆண்டு பாக்யராஜ், ஷோபனாவை வைத்து "இது நம்ம ஆளு" என்ற படத்தையும் இயக்கி உள்ளார்.