ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சமந்தா, அர்ஜுன் நடித்த இரும்புத்திரை திரைப்படம் நேற்று வெளியானது. மத்திய அரசின் கனவுத் திட்டமான டிஜிட்டல் இந்தியா, கேஸ்லெஸ் இந்தியா, போன்றவை படத்தில் விமர்சிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடந்த ஆதார் தகவல்கள் திருட்டு, வங்கி மோசடி செய்தவர்கள் வெளிநாடு தப்பி ஓட்டம் போன்றவை படத்தில் காட்டப்படுகிறது. இது அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறுகிறார்கள்.
விஷாலுக்கு எதிராக போராட்டம் நடத்துவோம் என்றும் சில அமைப்புகள் அறிவித்துள்ளன. இரும்புத்திரை படம் திரையிடப்பட்டுள்ள சில தியேட்டர்களில் காட்சிகள் குறைக்கப்பட்டதாகவும், நிறுத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் விஷால் வீடு மற்றும் அலுவலத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுகுறித்து விஷால் கூறியதாவது : சமூகத்தில் நடந்து வரும் பிரச்னைகள், வருங்கால சந்ததிகள் சந்திக்கப்போகும் பிரச்னைகளைத் தான் படத்தில் பேசி உள்ளோம். யாருக்கும் எதிராகவோ, விமர்சித்தோ படத்தில் கருத்து சொல்லப்படவில்லை. அதனால் யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. நான் சட்டத்தை மதிக்கிறவன், காவல்துறையை நம்புகிறவன். எதிர்ப்புகள், போராட்டங்களை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். என்றார்.