ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சினிமா வேலைநிறுத்தத்துக்கு பிறகு வாரத்துக்கு 3 படங்கள் ரிலீஸ் என்ற கட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டது. சில வாரங்கள் கடைபிடிக்கப்பட்ட இந்த கட்டுப்பாடு இந்த வாரம் காற்றில் பறந்துவிட்டது.
மித்ரன் இயக்கத்தில் விஷால், சமந்தா நடித்துள்ள 'இரும்புத்திரை', அருள்நிதி நடித்த இரவுக்கு ஆயிரம் கண்கள், அரவிந்த்சாமி நடித்த பாஸ்கர் ஒரு ராஸ்கல், கீர்த்தி சுரேஷ் நடித்த நடிகையர் திலகம் ஆகிய படங்கள் வருகிற 11-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகின்றன.
கடந்த வாரம் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து ஆபாசப்படம் 100க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இந்த வாரமும் தொடர்கிறது. எனவே இந்த வாரம் வெளியாகும் படங்களுக்கு 150 தியேட்டர்கள் கிடைத்தாலே பெரிய விஷயம் என்கின்றனர்.
இந்த வாரம் வெளியாகும் படங்களுக்கு 200 தியேட்டர்கள் கிடைத்தாலும் படம் நன்றாக இருந்தால் மட்டுமே வசூல் கிடைக்கும். அதுவும் அந்த வசூல் அடுத்த வாரமும் தியேட்டரில் வெற்றிநடை போட்டால் தான் நான்கு படங்களின் விநியோகஸ்தர்களுக்கும் லாபம் கிடைக்கும் என்கின்றனர்.