ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ரஞ்சித் - ரஜினி கூட்டணியில் உருவாகி உள்ள காலா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நந்தனம், ஒய்எம்சிஏ., மைதானத்தில் நடந்தது.
இதில் பேசிய இயக்குநர் ரஞ்சித், மீண்டும் இப்படி ஒரு மேடை அமைத்து தந்த ரஜினிக்கு நன்றி. இது மக்களின் சினிமா, மக்களுக்கான சினிமா, மக்களின் ஒருவருக்கான சினிமா
ரஜினியை சூப்பர் ஸ்டாராக அனைவரும் பார்த்திருப்போம். அதையும் தாண்டி அவரின் எளிமை, அவருக்குள் இருக்கும் மிகப்பெரிய பவரை வெளிக்கொண்டு வர வேண்டும் என எண்ணினேன். காலாவில் ரஜினியின் பவரை பார்க்கலாம்.
காலா ஒரு கமர்ஷியல் படம் தான். அதில் மக்களின் பிரச்னைகளை பேச வேண்டும் என ஆசைப்பட்டேன். ரஜினியின் வழக்கமான படமாக காலா இருக்காது. மனித மாண்பை மீட்டெடுக்கும் படமாக இருக்கும்.
நம் வாழ்க்கையில் நிகழும் முக்கியமான பிரச்னையை இந்தப்படம் பேசும். நம் நாட்டில் 60 சதவீதம் மக்கள் நிலம் இல்லாமல் உள்ளார்கள். அது ஏன்?, அதற்கான காரணம் என்ன என்பதை காலாவில் பார்க்கலாம்.
இவ்வாறு ரஞ்சித் பேசினார்.