அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா | பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் |
சென்னை பொண்ணு ரெஜினா கெசாண்ட்ரா. பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் அவரது உதவியாளர் ப்ரியா இயக்கி கண்ட நாள் முதல் படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்தார். அதன் பிறகு அழகிய அசுரா என்ற படத்தில் நடித்தார். இங்கு அவரை யாரும் கண்டு கொள்ளவில்லை.
இதனால் தெலுங்கு பக்கம் சென்றார். அங்கு கொஞ்சம் கவர்ச்சியை அள்ளி வீசினார். பெரிய நடிகை ஆகிவிட்டார். கிளாமர் கலந்த கேரக்டரா கூப்பிடுங்கள் ரெஜினாவை என்கிற அளவிற்கு மளமளவென வளர்ந்தார். அங்கு 20 படங்களுக்கு மேல் நடித்து விட்டார். அவ்வப்போது தமிழ் படங்களிலும் நடிப்பார். கேடி பில்லா கில்லாடி ரங்கா, நிர்ணயம், ராஜதந்திரம் படங்களில் நடித்தார்.
ஆனால் இப்போது தெலுங்கு சினிமா கொஞ்சம் கைவிட ஆரம்பிக்க தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். மாநகரம், சிலுக்குவார்பட்டி சிங்கம், சரவணன் இருக்க பயமேன், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும், பார்ட்டி, நெஞ்சம் மறப்பதில்லை என அடுத்தடுத்து நடித்து இங்கேயே செட்டிலாகிவிட்டார்.
அடுத்த கட்டமாக தானே தமிழில் சொந்தமாக டப்பிங் பேசவும் ஆரம்பித்துவிட்டார். மிஸ்டர் சந்திரமவுலி படத்தில் கவர்ச்சியாக நடித்திருக்கும் ரெஜினா, டப்பிங்கும் பேசியுள்ளார். "நான் தமிழ்பொண்ணு நன்றாக தமிழ் பேசுவேன். இயக்குனர் திரு சார் என் மீது நம்பிக்கை வைத்து பேச வைத்துள்ளார். இனி நான் நடிக்கும் படங்களில் நானே டப்பிங் பேசுவேன்" என்கிறார் ரெஜினா.