ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மன்னர் வகையறா படத்தை அடுத்து, 'கன்னிராசி', 'களவாணி-2' உட்பட அரைடஜன் படங்களில் நடித்து வருகிறார் விமல். இவற்றில் 'கன்னிராசி' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. விரைவில் இப்படம் வெளியாகிறது.
'களவாணி-2' படத்தின் படப்பிடிப்பு மே 3-ஆம் தேதி துவங்கவிருக்கிறது. இந்த படங்களைத் தொடர்ந்து எழில், சுராஜ் ஆகியோர் இயக்கும் படங்களில் நடிக்க இருக்கிறார் விமல். இதில் சுராஜ் இயக்கும் படத்தில் விமலுடன் வடிவேலுவும் இணைந்து நடிக்க இருக்கிறார்.
முழுநீள காமெடி படமாக உருவாகவிருக்கும் இந்தப் படத்தில் விமலும், வடிவேலுவும் போலீஸ்காரர்களாக நடிக்க இருக்கிறார்கள். அதாவது சுராஜ் இயக்கத்தில் அர்ஜுன் நடித்த மருதமலை படத்தில் வடிவேலு போலீஸ் ஏட்டாக நடித்தார். அர்ஜூன் கான்ஸ்டபிளாக நடித்தார்.
தற்போது விமல் நடிக்க உள்ள படத்தில் இந்த காமெடி டிராக்கையே முழுநீளப்படமாக எடுக்கும் திட்டத்தில் திரைக்கதை அமைத்திருக்கிறாராம் சுராஜ். இதனால் படத்துக்கு மருதமலை-2 என்று பெயர் சூட்டலாமா என்றும் யோசித்து வருகின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் துவங்கவிருக்கிறது.