ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகில் இருக்கும் பிரபல நடிகையர், சமூக வலைதளங்களில், தாங்கள் நடிக்கும் படங்கள், அவற்றின் புகைப்படம், சுற்றுலா புகைப்படங்கள் போன்றவற்றைத் தான், அதிகம் பதிவிடுவது வழக்கம். அரசியல், பொது விஷயங்களைப் பற்றி, மறந்தும் பதிவிடுவது இல்லை.
ஆனால், பாலிவுட்டில் அப்படி அல்ல; பெரும்பாலான நடிகையர், துணிச்சலாக அரசியல் விமர்சனங்களை முன் வைக்கின்றனர். தங்களுக்கும் சமூக பொறுப்பு உள்ளது என்பதை உணர்த்தும் வகையில் பல கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.
கவுரவம் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த, யாமி கவுதம் போடும் பதிவுகள் தான், வட மாநில அரசியல்வாதிகளை கலங்கடிக்கின்றன. அதிலும், சமீபகாலமாக நடக்கும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து, சமூக வலைதளங்களில், கடுமையாக யாமி கவுதம் விமர்சித்துள்ளது, சக நடிகையரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.