ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அமெரிக்காவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் வட அமெரிக்க தமிழ்சங்க பேரவை (பெட்னா) என்ற அமைப்பின் கீழ் இணைந்திருக்கிறார்கள். இந்த அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் பெட்னா பெஸ்டிவல் நடத்தப்படுகிறது.
இதில் தமிழ் பண்பாடு, கலாச்சாரம், பெண்கள், குழந்தைகள், வருங்கால தொழில்நுட்பம், ஆகியவவை குறித்த கருத்தரங்கம், மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடக்கும். அத்துடன் தமிழ் திரைப்பட கலைஞர்களை அழைத்தும் கவுரவப்படுத்துவார்கள்.
இந்த ஆண்டுக்கான பெட்னா பெஸ்டிவல் வருகிற ஜூன் 29 முதல் ஜூலை 1 வரை அமெரிக்காவில் உள்ள டல்லாஸ் நகரில் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஜல்லிக்கட்டுக்காக போராடிய ஹிப்ஆப் தமிழா ஆதி, ஜி.வி.பிரகாஷ், கார்த்தி, அகரம் தொண்டு நிறுவனம் நடத்தும் சூர்யா, நடிகை ஆல்யா மானசா, நடிகர் மா.பா.கா.ஆனந்த், பாண்டியராஜன், ஞானசம்பந்தம் உள்ளிட்டவர்கள் கவுரவிக்கப்படுகிறார்கள். இதனை பெட்னாவின் செயலாளர் கார்டுவெல் வேல்நம்பி தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:
பேரவைத் தமிழ் விழாவின் இந்த ஆண்டு மையக்கருத்து “செந்தமிழ் இருக்கை செய்வோம், செம்மொழி சிறக்கச் செய்வோம்” என்பதாகும். இந்த ஆண்டு ஒரு சிறப்பாக, நம் சமூகத்தின் வளர்ச்சியில் பெண்களின் பங்கினை போற்றிடவும், நம் சமூகத்தின் எதிர்காலமான நம் குழந்தைகளை கொண்டாடும் நோக்கிலும் “மரபு, மகளிர், மழலை” எனும் கருப்பொருளில் “பேரவைத் தமிழ் விழா 2018” நிகழ்வுகளை அமைக்க பெரும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் விழாவின் கருப்பொருளுக்கு ஏற்ப, அன்னைத் தமிழின் வளர்ச்சிக்கும் தமிழர் தம் நல்வாழ்விற்கும் உழைத்திட்ட பெருமக்களை, நினைவுகூர்ந்து சிறப்பு செய்வது பேரவையின் வழமை. அந்த வகையில் இவ்வாண்டு அந்நிய மண்ணில் இனவெறிக்கு எதிராகப் போராடிய “இரும்பு மங்கை” தில்லையாடி வள்ளியம்மையின் 120-ஆம் பிறந்தாண்டு மற்றும் ஈழத்தந்தை செல்வாவின் 120-ஆம் பிறந்தாண்டு விழாவினையும், 2018 பேரவைத் தமிழ் விழாவில் சிறப்பிக்க இருக்கிறோம். என்றார்.