தணிக்கை நடைமுறையில் உள்ள சிக்கல் : 'பராசக்தி' வெளியீடும் தள்ளிப் போகலாம் | பெண் இயக்குனர் இயக்கிய படமா? ராம்கோபால் வர்மா ஆச்சரியம் | ஜனநாயகன் ரிலீஸ் சிக்கல் : விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த திரைப்பிரபலங்கள் | தெலுங்கில் மாஸ் காட்டிய 'அகண்டா-2' முதல்... பீல் குட் மூவி 'அங்கம்மாள்' வரை இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | 'ஜனநாயகன்' தள்ளிப்போனதால் நிகிலா விமல் படத்துக்கு அடித்த ஜாக்பாட் | 'பராசக்தி' படத்தில் பசில் ஜோசப் ; உறுதி செய்த சிவகார்த்திகேயன் | சிறப்பு பாடல்களுக்கு இனிமேல் நடனமாட மாட்டேன்!- ஸ்ரீ லீலா வெளியிட்ட தகவல் | 'பராசக்தி'யில் யுவன் சங்கர் ராஜா பாடிய 'சேனைக் கூட்டம்' பாடல் வெளியானது! | கார்த்தியின் 'வா வாத்தியார்' பொங்கலுக்கு திரைக்கு வருகிறதா? | 'தக் லைப்' விவகாரம் : அப்போது குரல் கொடுக்காத விஜய்.. |

45 நாள் சினிமா வேலை நிறுத்தத்திற்கு பிறகு வெளியான முதல் படம் மெர்க்குரி. ஹாலிவுட் பாணியில் உருவாகியிருக்கும் சைலண்ட் த்ரில்லர் படமான மெர்க்குரியை ரஜினி தனது வீட்டு தியேட்டரில் பார்த்தார். பின்னர் அவர் மெர்க்குரி கலைஞர்களை சந்தித்து பாராட்டு தெரிவிக்க விரும்பினார்.
இதன் அடிப்படையில் நேற்று மெர்க்குரி டீம் ரஜினியை சந்தித்தனர். இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கார்த்திக் சுப்பராஜ், நடிகர்கள் சனான்ந்த் ரெட்டி, தீபக் பரமேஷ், ஷன்ஷக் புருஷோத்தமன், அனிஷ் பத்மநாபன், நடிகை இந்துஜா, இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவாளர் திரு. ஆகியோர் ரஜினியை சந்தித்தார்.
அவர்களிடம் ரஜினி படத்தில் வரும் காட்சிகளை தனித்தனியாக சொல்லி வியந்து பாராட்டினார். குறிப்பாக பிரபுதேவா, இந்துஜா நடிப்பையும், பின்னணி இசையையும் வெகுவாக பாராட்டினார்.
பிரபுதேவா ஹிந்திப் பட பணிகள் காரணமாக மும்பையில் இருப்பதால் அவர் இதில் கலந்து கொள்ளவில்லை. ரஜினியின் அடுத்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.