இருமனம் ஒருமனமான தருணம்... : 2025ல் கெட்டிமேளம் கொட்டிய திரைப்பிரபலங்கள்...! | பிளாஷ்பேக்: புதுமுகங்களின் அணிவகுப்பில் புதுமை படைத்த “பொண்ணுக்கு தங்க மனசு” | பான் இந்தியா அளவில் முன்னேறிச் சென்றது தனுஷ் மட்டுமே… | ராதிகா சரத்குமார் கொடுத்த கிறிஸ்துமஸ் 'லன்ச்' விருந்து | தள்ளிப் போகிறதா 'பராசக்தி' தெலுங்கு ரிலீஸ்? | நிலத்தில் உழவு செய்த சல்மான் கான், தோனி | பாதிக்கப்பட்டவரை குற்றம் சாட்டுவதா ? நிதி அகர்வால் கமெண்ட் | ஆக் ஷன் மோடில் ராஷ்மிகா : மைசா முன்னோட்டம் வெளியீடு | கேரளாவில் பஹத் பாசிலை சந்தித்த பார்த்திபன் ; அதிரவைத்த பாசில் | கவுரவ காதல் கொலை பின்னணியில் உருவாகும் 'புகார்' |

45 நாள் சினிமா வேலை நிறுத்தத்திற்கு பிறகு வெளியான முதல் படம் மெர்க்குரி. ஹாலிவுட் பாணியில் உருவாகியிருக்கும் சைலண்ட் த்ரில்லர் படமான மெர்க்குரியை ரஜினி தனது வீட்டு தியேட்டரில் பார்த்தார். பின்னர் அவர் மெர்க்குரி கலைஞர்களை சந்தித்து பாராட்டு தெரிவிக்க விரும்பினார்.
இதன் அடிப்படையில் நேற்று மெர்க்குரி டீம் ரஜினியை சந்தித்தனர். இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கார்த்திக் சுப்பராஜ், நடிகர்கள் சனான்ந்த் ரெட்டி, தீபக் பரமேஷ், ஷன்ஷக் புருஷோத்தமன், அனிஷ் பத்மநாபன், நடிகை இந்துஜா, இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவாளர் திரு. ஆகியோர் ரஜினியை சந்தித்தார்.
அவர்களிடம் ரஜினி படத்தில் வரும் காட்சிகளை தனித்தனியாக சொல்லி வியந்து பாராட்டினார். குறிப்பாக பிரபுதேவா, இந்துஜா நடிப்பையும், பின்னணி இசையையும் வெகுவாக பாராட்டினார்.
பிரபுதேவா ஹிந்திப் பட பணிகள் காரணமாக மும்பையில் இருப்பதால் அவர் இதில் கலந்து கொள்ளவில்லை. ரஜினியின் அடுத்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.