பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
45 நாள் சினிமா வேலை நிறுத்தத்திற்கு பிறகு வெளியான முதல் படம் மெர்க்குரி. ஹாலிவுட் பாணியில் உருவாகியிருக்கும் சைலண்ட் த்ரில்லர் படமான மெர்க்குரியை ரஜினி தனது வீட்டு தியேட்டரில் பார்த்தார். பின்னர் அவர் மெர்க்குரி கலைஞர்களை சந்தித்து பாராட்டு தெரிவிக்க விரும்பினார்.
இதன் அடிப்படையில் நேற்று மெர்க்குரி டீம் ரஜினியை சந்தித்தனர். இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கார்த்திக் சுப்பராஜ், நடிகர்கள் சனான்ந்த் ரெட்டி, தீபக் பரமேஷ், ஷன்ஷக் புருஷோத்தமன், அனிஷ் பத்மநாபன், நடிகை இந்துஜா, இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவாளர் திரு. ஆகியோர் ரஜினியை சந்தித்தார்.
அவர்களிடம் ரஜினி படத்தில் வரும் காட்சிகளை தனித்தனியாக சொல்லி வியந்து பாராட்டினார். குறிப்பாக பிரபுதேவா, இந்துஜா நடிப்பையும், பின்னணி இசையையும் வெகுவாக பாராட்டினார்.
பிரபுதேவா ஹிந்திப் பட பணிகள் காரணமாக மும்பையில் இருப்பதால் அவர் இதில் கலந்து கொள்ளவில்லை. ரஜினியின் அடுத்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.