ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
காஷ்மீர் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் குரல் கொடுத்து வருகின்றனர். திரைத்துறையினர் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
ஸ்டன்ட் யூனியன் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் விஜய் சேதுபதி, இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசும்போது, சிறுமி மரணம் குறித்து கேட்கும்போதே மனம் கலங்குகிறது. சிறுமியின் மரணத்திற்கு காரணமானவர்களை பார்த்தால் ஆத்திரம் வருகிறது. பெண் குழந்தைகளை வளர்க்க பாடம் எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் போதாது என்றார்.