ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில், பிரபுதேவா நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸான 'மெர்க்குரி' படம், உலகம் முழுவதும் ரிலீஸாகிவிட்டது. சைலண்ட் த்ரில்லராக எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம், தயாரிப்பாளர் சங்கத்தின் போராட்டம் காரணமாக தமிழ்நாட்டில் மட்டும் ரிலீஸாகவில்லை.
இந்நிலையில், மெர்குரி படம் இணையதளத்தில் வெளியானதோடு, திருட்டு டிவிடியாகவும் புழங்க ஆரம்பித்தது. இதனால் தமிழில் படத்தை வெளியிடும்போது வசூல் பாதிக்கப்படும் என்பதால் 'தயவுசெய்து திருட்டு விசிடியில் படம் பார்க்காதீர்கள்' என வேண்டுகோள் விடுத்துள்ளார் பிரபுதேவா.
இதுகுறித்து டுவிட்டரில் அவர் ஒரு வீடியோவை வெளியிட்டிருகிறார்.
“எல்லாருக்கும் வணக்கம். ஏப்ரல் 13 ஆம் தேதி உலகம் முழுவதும் 'மெர்க்குரி' ரிலீஸாகியுள்ளது. எல்லாருக்கும் பிடித்திருக்கிறது; நல்ல விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. வேலை நிறுத்தம் காரணமாக தமிழ்நாட்டில் ரிலீஸாகவில்லை. ஆனால், சீக்கிரம் ரிலீஸாகிவிடும். அதுவரைக்கும் நீங்கள் பைரசி, திருட்டு விசிடி இந்த மாதிரியெல்லாம் படம் பார்க்காமல், தியேட்டருக்கு வந்து படம் பார்க்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்.
இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ் உங்களுக்காகப் புதிதாக யோசித்து, புதுவிதமான படத்தை கொடுத்திருக்கிறார். அதேமாதிரி தயாரிப்பாளரும் அவ்வளவு பணம் போட்டு, டீம் ஒர்க்கா இரண்டு பேரும் சேர்ந்து படம் பண்ணியிருக்காங்க. திருட்டு விசிடியில் படம் பார்க்காமல், தியேட்டருக்கு வந்து பாருங்கள்” எனத் தெரிவித்துள்ளார் பிரபுதேவா.