ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஸ்டன்ட் யூனியன் துவங்கப்பட்ட 51வது தினம் சென்னை வடபழனியில் கொண்டாடப்பட்டது. இதில் விஜய் சேதுபதி, விக்ரமன், கலைப்புலி எஸ்.தாணு உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் ஸ்டன்ட் கலைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு கண் சிகிச்சை முகாம் உள்ளிட்ட இலவச மருத்துவ முகாம் நடந்தது. ஏராளமான கலைஞர்கள் ரத்ததானம், கண்தானம் செய்தனர்.
நடிகர் விஜய் சேதுபதியும் ரத்ததானம் செய்து ஆச்சர்யப்படுத்தினார். பின்னர் பேசிய விஜய் சேதுபதி, படப்பிடிப்பின் போது சண்டைக்காட்சிகளில் எங்களுக்காக எவ்வளவோ ரத்தத்தை நீங்கள் இழந்துள்ளீர்கள். உங்களுக்காக இந்த விழாவில் நானும் கலந்து கொண்டு ரத்ததானம் செய்ததை நன்றிக்கடனாக நினைக்கிறேன். ஒவ்வொரு ஆண்டும் இதுப்போன்று மற்றவர்களையும் செய்ய வலியுறுத்துவேன் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் ஸ்டன்ட் கலைஞர்களின் மூத்த உறுப்பினர்கள் 6 பேர் கவுரவிக்கப்பட்டனர்.
சங்கத்திற்கு புதிதாக WWW.SISDSAU.COM என்ற இணையதளமும் துவங்கப்பட்டது.
இந்த சங்கத்திற்கு தயாரிப்பாளர் தாணு ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கினார்.
விழாவில் பேசிய இயக்குநர் விக்ரமன், ஸ்டன்ட் காட்சிகளில் சற்று நிதானத்தை கடைபிடியுங்கள். ரத்ததானம், கண்தானம் செய்த அனைவருக்கும் நன்றி என்றார்.