ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'விரைவில் சகோதரர் சமுத்திரக்கனி நடிக்க, நான் இயக்க இணைவதென முடிவானது' ட்விட்டரில் பதிவிட்டார் சீனு ராமசாமி. அதுவே அவருக்கு நெகட்டிவ்வாக மாறியது. அப்படியானால், விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குவதாக அறிவிக்கப்பட்ட 'மாமனிதன்' படம் என்னவானது? அந்தப்படம் ட்ராப்பாகிவிட்டதா என்ற கேள்வி எழுந்ததும் பதறிவிட்டார் சீனுராமசாமி.
இது குறித்து சீனு ராமசாமியிடம் கேட்டபோது விளக்கம் அளித்தார்.. “விஜய் சேதுபதியின் 'மாமனிதன்' படத்தை இயக்கி பிறகே, சமுத்திரக்கனி படத்தை இயக்க உள்ளேன். சமுத்திரக்கனி நடிக்கும் படங்களில் சமுதாயக் கருத்துகள் நிறைந்து இருக்கும். நாங்கள் இணையும் படமும் பரபரப்பான படமாக இருக்கும். 'கண்ணே கலைமானே' ரிலீஸுக்குப் பிறகு விஜய் சேதிபதி நடிக்கும் 'மாமனிதன்' ஷூட்டிங் தொடங்கும்” என்றார்.
விஜய் சேதுபதி - சீனு ராமசாமி கூட்டணி ஏற்கனவே மூன்று படங்களில் இணைந்துள்ளனர். இந்தக் கூட்டணி நான்காவது முறையாக இணையும் படம் 'மாமனிதன்'. 'தர்மதுரை' சூப்பர் ஹிட் வெற்றியால், இந்தப் படத்துக்கு நிறைய எதிர்பார்ப்பு இருக்கிறது. யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
சமுத்திரக்கனி தற்போது 'நாடோடிகள் 2' படத்தை இயக்கி வருகிறார். சசிகுமார் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில், அஞ்சலி மற்றும் அதுல்யா ரவி என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர்.
இந்தப்படத்தை முடித்த பிறகே சீனுராமசாமியின் படத்தில் இணைகிறார் சமுத்திரக்கனி.