ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஹுமா குரேஷி, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்துள்ள 'காலா' படம் ஏப்ரல் 27ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தமிழ்த் திரையுலகத்தில் கடந்த 46 நாட்களாக எந்தப் புதுப் படமும் வெளியாகவில்லை. திரையுலக் பிரச்சினைகளுக்காக நாளை அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அதன்பிறகுதான் இந்த வேலை நிறுத்தம் முடிவுக்கு வருமா என்பது தெரிய வரும்.
இதனிடையே, 'காலா' படத்தைத் தடையை மீறி வெளியிட படத் தயாரிப்பு முடிவு செய்ததாக முன்னர் செய்திகள் வெளியாகின. அதன்பின் தயாரிப்பாளர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ரஜினிகாந்திடம் சென்று நிலைமையை விளக்கினார்கள். அதன் பின் படத்தையும் தள்ளி வைக்க அவர்கள் சம்மதித்ததாகத் தெரிகிறது.
'காலா' படத்தை ஜுன் மாதம் வெளியிட அப்படத்தை வாங்கியுள்ள லைகா நிறுவனம் முடிவு செய்ததாக கடந்த வாரம் தகவல் வெளியானது. தற்போது ரம்ஜானை முன்னிட்டு படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்கள் என்கிறார்கள். ஜுன் 16 ரம்ஜான் கொண்டாடப்பட உள்ளது. அதற்கு முன்தினம் ஜுன் 15ம் தேதி வெள்ளிக்கிழமை படத்தை வெளியிட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறதாகத் தெரிகிறது.