ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
65வது தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. பிரபல இயக்குனர் சேகர் கபூர் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவினர் அனைத்துப் படங்களையும் பார்த்து விருதுக்குரியவர்களைத் தேர்ந்தெடுத்தார்கள்.
இன்று விருதுகள் அறிவிக்கப்பட்ட போது, பல பிராந்திய மொழிப் படங்கள் முக்கிய விருதுகளைப் பெற்றதால் அந்தப் படங்களின் பெயர்கள், விருது பெற்றவர்களின் பெயர்களை உச்சரிக்க சேகர் கபூர் தடுமாறினார். அவருக்கு அந்தந்த மொழி தெரிந்த பத்திரிகையாளர்கள் கூடவே அவற்றைச் சரியாகச் சொல்லி திருத்தமும் செய்தார்கள்.
'பாகுபலி 2' படத்திற்காக சிறந்த ஆக்ஷ்ன் இயக்குனர் விருது அப்பாஸ் அலி மொகுல் என்ற கலைஞருக்கு வழங்கப்படுவதாக அறிவித்தார்கள். அவர் பாலிவுட்டின் பிரபல ஆக்ஷன் இயக்குனர். ஆனால், அவர் 'பாகுபலி 2' படத்திற்காகப் பணியாற்றவேயில்லை. அது பற்றி 'பாகுபலி 2' படத்தின் தயாரிப்பாளரும் உடனடியாக டுவிட்டரில் 'பாகுபலி மற்றும் பாகுபலி 2' படங்களில் அவர் பணிபுரியவேயில்லை' என்று குறிப்பிட்டார்.
பின்னர் அனுப்பப்பட்ட பத்திரிகைச் செய்தியில் 'பாகுபலி 2' படத்தின் பெயர் ஆக்ஷ்ன் இயக்குனர் விருதுக்கு மட்டும் தேர்வு செய்யப்பட்டதாக அனுப்பினார்கள். ஆனால், அந்த இயக்குனர் யார் என்ற பெயரைக் குறிப்பிடவேயில்லை. 'பாகுபலி 2' படத்தின் ஆக்ஷன் இயக்குனராக லீ விடேகர் என்பவர் பணியாற்றியிருக்கிறார்.