‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
தமிழ்த் திரையுலகத்தில் கடந்த மார்ச் 1ம் தேதி முதல் புதிய படங்களை வெளியிடாமல் நிறுத்தி வைத்துள்ளார்கள். இந்த வேலை நிறுத்தப் போராட்டம் எப்போது முடிவடையும் என்பது பற்றி திரையுலகத்தில் உள்ள பலருக்கு தெரியாமல் இருக்கிறது.
ஒரு பக்கம் தயாரிப்பாளர் சங்கம் புதுப் புது ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுக் கொண்டிருந்தாலும் மற்றொரு பக்கம் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர முயற்சிகள் எடுப்பதாகச் சொல்கிறார். நேற்று கூட சங்கத் தலைவர் விஷால் அமைச்சரை சந்தித்துப் பேசியுள்ளார். ஆனால், அது பற்றிய விவரங்களை வெளியிடவில்லை.
இதனிடையே, மௌனப் படமாக எடுக்கப்பட்டுள்ள 'மெர்க்குரி' படம் நாளை தமிழ்நாட்டைத் தவிர மற்ற மாநிலங்களில், வெளிநாடுகளில் வெளியாகிறது. இந்தப் படத்தை முதலில் தமிழ்நாட்டிலும் வெளியிடப் போவவதாக படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அறிவித்திருந்தார். ஆனால், அதற்கு மற்ற தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த முடிவிலிருந்து பின்வாங்கினார். நாளை இப்படத்தை மற்ற இடங்களில் வெளியிடுகிறார்.
இது மௌனப் படம் என்பதால் படத்தை வேறு மாநிலங்களில் வெளியிட்டாலும் தமிழ்நாட்டில் வெளியிட வரும் போது வரவேற்பைப் பெறுவது கடினம். அதற்குள் படத்தின் பைரசி வெளிவந்துவிட்டால், தமிழ்நாட்டு வியாபாரமும் பாதிக்கும், வசூலும் பாதிக்கும்.