ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கமல்ஹாசன் கட்சி தொடங்கி அரசியலில் குதித்து விட்டார். ரஜினி மாவட்டம் தோறும் நிர்வாகிகளை நியமித்து வருகிறார். விரைவில் அவர் கட்சி தொடங்க இருக்கிறார். இருவரும் அரசியலுக்கு வருவது உறுதியாகிவிட்டது. ரஜினி ஆன்மீக அரசியலையும், கமல் நாத்திக அரசியலையும் முன்னெடுக்கிறார்கள் அடிப்படையிலேயே இருவரும் வேறுபட்டு நிற்கிறார்கள்.
எதிர் எதிர் களத்தில் நிற்கப்போகும் இருவரும் ஒருவரை ஒருவர் கொள்கை ரீதியாக விமர்சனம் செய்யவும் போகிறார்கள் அதற்கு கமல் நேற்று பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார் கமல்.
அண்ணா பல்கலைழகத்திற்கு புதிய துணை வேந்தராக கர்நாடகாவை சேர்ந்த சூரப்பா நியமிக்கப்பட்டிருக்கிறார். இதனை விமர்சித்த கமல் தனது டுவிட்டரில் "கர்நாடகாவிலிருந்து தண்ணீர் கேட்டால் துணை வேந்தரை அனுப்பி வைக்கிறார்கள்" என்று குறிப்பிட்டிருந்தார். இது கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதற்கு விளக்கம் அளித்து இன்னொரு டுவிட் போட்டார் கமல் அதில்...
நடிகர் நாகேஷ் எனது குருநாதர்களில் ஒருவர். ராஜ்குமார் அண்ணா, சரோஜாதேவி என்னுடைய நண்பர்கள், ரஜினிகாந்த், அம்ரீஷ்பூரி என்னவர்கள். எனவே நான் சொன்னது மத்திய மாநில அரசுகள் தொடர்பான ஒரு நகைச்சுவை கருத்து. அது கவர்னரை சாடும் கருத்தல்ல. எது என்ன ஆனாலும் தமிழகத்துக்கு தண்ணீர் வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
கமல் குறிப்பிட்டுள்ள அனைவரும் கர்நாடகத்திலிருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னுடய கன்னட நண்பர்களின் பட்டியலில் கமல், ரஜினியையும் சேர்த்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.