சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
காவரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக கர்நாடகாவை சேர்ந்த சூரப்பா என்பவரை கவர்னர் பன்வாரிலால் நியமித்துள்ளார். இதற்கும் தமிழக அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் நல்ல கல்வியாளர்கள் இல்லையா, தமிழர்களை இழிவுப்படுத்த வேண்டாம், காவிமையமாக்க வேண்டாம் என்றெல்லாம் குரல்கள் ஒலிக்க தொடங்கி உள்ளன.
நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசனும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். அவர் தன் டுவிட்டரில் பதிவில், "கர்நாடகத்திலிருந்து காவிரி தண்ணீர் கேட்டால் துணைவேந்தரை அனுப்பி வைக்கிறார்கள். தமிழக மக்களின் மனநிலையை மத்திய மாநில அரசுகள் உணரவில்லையா? இல்லை உணரத் தேவையில்லை என எண்ணி விட்டார்களா? சீண்டுகிறார்கள். இந்த சீண்டல் எதை எதிர்பார்த்துச் செய்யப்படுகிறது?"
என பதிவிட்டுள்ளார்.