ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கியூப் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் கடந்த மார்ச் 1ந் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்து வருகிறது. ஒரு மாதமாக திரையுலகம் முடங்கிக் கிடக்கிறது. இந்த பிரச்சினை குறித்து தயாரிப்பாளர் சங்கமும், தியேட்டர் அதிபர்கள் சங்கமும் பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்கள். அது வெற்றி பெறவில்லை.
தற்போது தயாரிப்பாளர் சங்கம், கியூப் கட்டணத்தை தியேட்டர்களே கட்ட வேண்டும், டிக்கெட்டை ஆன்லைனில் விற்க வேண்டும், கேண்டீன், பார்க்கிங் கட்டணங்களை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளையும் வைத்துள்ளனர். இந்த நிலையில் தமிழ்நாடு தியேட்டர் அதிபர்கள் சங்க பொதுச்செயலாளர் ரோகினி பன்னீர் செல்வம் சங்க உறுப்பினர்களுக்கு ஆடியோ மெசேஜ் ஒன்றை வாட்ஸ்அப் மூலம் அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
நாம் ஒரு சிக்கலான சூழ்நிலையில் பிரயாணம் செய்து கொண்டிருக்கிறோம். இதை நாம் வெற்றிகரமாகக் கடக்க வேண்டும். அதற்கு நமது மன உறுதிதான் மிகவும் அவசியம். இரண்டு தினங்களுக்கு முன் நாம் தயாரிப்பாளர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை, மிகவும் வெற்றிகரமாகத் தோல்வியடைந்தது. நமது கோரிக்கைகளை அவர்கள் ஏற்பதாக இல்லை. அவர்கள் கோரிக்கையையும் நாம் ஏற்பதாக இல்லை.
இந்தப் பிரச்சினை எப்போது முடியுமென்று தெரியவில்லை. ஆனால், நம் முடிவில் இருந்து எக்காரணம் கொண்டும் பின்வாங்குவதில்லை என்ற தெளிவான முடிவில் நமது சங்கமும் உறுப்பினர்களும் இருக்கின்றார்கள். நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம். வெற்றி நம் பக்கம்தான். கண்டிப்பாக வி.பி.எப். சார்ஜை நாம் கட்டமாட்டோம். அதில், நாம் உறுதியாக இருக்கின்றோம். இந்த உறுதியை நீங்களும் உங்கள் மனதில் ஏற்றுக்கொண்டு செயல்படும்படி கேட்டுக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார் பன்னீர் செல்வம்.